ஞாயிறு, 3 ஜூலை, 2011

கார்த்தி - ரஞ்சனி திருமணம்! (படம் இணைக்கப்பட்டுள்ளது)


நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமணம் கோவையில் இன்று காலை கோலாகமாக நடந்து முடிந்தது. இதில் திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர் கார்த்திக்கும் ஈரோடு அருகே உள்ள கிலாம்பாடியை சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமண நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் இன்று காலை நடந்தது.

மணமகள் ரஞ்சனி கழுத்தில் கார்த்தி தாலி கட்டினார். அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் உற்சாகத்துடன் வாழ்த்து கோஷமிட்டு மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

இதில் ஜோதிகா, நக்மா, அவரது தங்கை ரோஷினி, நடிகர் சிபி, நடிகர் ராஜேஷ், டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், சுராஜ், இசையமைப்பாளர்கள் கணேஷ், ஜி.வி.பிரகாஷ், மனிதநேய கல்வி அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, பேராசிரியர் சாலமன் பாப்பையா, நடிகர் சிவாஜியின் நண்பர் சேத்துமடை முத்துமாணிக்கம், கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

கார்த்தி - ரஞ்சனி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 7ம்தேதி நடைபெறுகிறது. இதில் திரையுலக பிரமுகர்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்த உள்ளனர். புதுமண தம்பதிகளுக்க ரசிகர்கள் இங்கே வாழ்த்தை பகிர்ந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: