வியாழன், 28 ஜூலை, 2011

கொழும்பு – கிளிநொச்சி விமான சேவை இன்று ஆரம்பம்

கொழும்புக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான விமான சேவை முதற் தடவையாக இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான படை தகவல்கள் தெரிவித்தன. இலங்கை விமான படையினால் மேற்கொள்ளப்படவுள்ள இந்த சேவை வாரத்தில் ஒரு தடவை இடம்பெறவுள்ளது.

இதற்கான ஒரு வழி கட்டணமாக 7,500 ரூபாய் அறவிடப்படவுள்ளது. இந்த விமானத்தில் 15 பயணிகள் பயணிக்க முடியும்.

விடுதலை புலிகள் இயக்கத்தினரின் கோட்டையாக கிளிநொச்சியில் கடந்த 19ஆம் திகதி இலங்கை விமானப் படை ஓடுபாதையொன்றை திறந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: