புதன், 27 ஜூலை, 2011

கனகராயன்குளத்தில் விதை உற்பத்திப்பண்ணை

உலக வங்கியின் நிதி உதவியுடன் கனகராயன்குளத்தில் 200 ஏக்கர் காணியில் விதை உற்பத்திப் பண்ணை ஆரம்பிக்கப்படவுள்ளது.  இதற்குரிய அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.

அதேநேரத்தில் நயினாமடுவில் 200 ஏக்கரில் உயர்தர கால்நடை உற்பத்தி நிலையம் அமைக்க தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கும் உலக வங்கி நிதி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு திட்டங்களும் நிறைவேறும் பட்சத்தில் பிரதேசத்தைச் சேர்ந்த பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 


கருத்துகள் இல்லை: