வெள்ளி, 29 ஜூலை, 2011

யாழ்.நகருக்கு அண்மையில் கோஷ்டி மோதல்

யாழ்.நகருக்கு அண்மையில் புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இம் மோதலை, சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் வானத்தை நோக்கித் துப்பாக்கியிப் பிரயோகம் செய்து மோதலைக் கட்டுப்படுத்தினர்.

சம்பவதினம் இரவு 8 மணியளவில் ஆஸ்பத்திரி வீதி முலைவைச் சந்தியில் நின்ற ஒரு குழுவுக்கும், புகையிரத நிலைய வீதியில் நின்ற ஒரு குழுவுக்குமிடையே மோதல் வெடித்தது.

இரு தரப்பினரும் போத்தல்கள், கல்லுகளால் மாறிமாறி தாக்கத் தொடங்கினர். இதனையடுத்து அப் பகுதி பெரும் களேபர பூமியாகக் காட்சியளித்தது. அப் பகுதியூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் தடைப்பட்டன.

வீதி போத்தல் சிதறல்களால் குவிந்து காணப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற இராணுவத்தினர் விரைந்து சென்று வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு மோதலைக் கட்டுப்படுத்தியதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை கைது செய்ததுடன் மோதல் குறித்த விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்று முன்தினம் இரவு முழுவதும் அப் பகுதியில் பொலிஸார் பெருமளவு குவிக்கப்பட்டிருந்ததாகப் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துகள் இல்லை: