செவ்வாய், 26 ஜூலை, 2011

வவுனியாவில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை

வவுனியா புதிய பஸ் நிலையம் அமைப்பதற்குரிய இடம் அடையாளம் காணப்பட்டு மூன்று ஏக்கர்  காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

வவுனியா அரசினர் பண்ணையின் நெல்வேளாண்மை செய்யப்படும் காணி பஸ் நிலைய புதிய கட்டிட தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு காணிக்கு மண் போட்டு நிரப்புவதற்கு கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட அரச அதிபர்  தெரிவித்தார்.

நிர்மாண பணிகள் நிறைவு பெற்றதும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் சகல பஸ்களும் இந்த நிலையத்தில் இருந்தே புறப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 


கருத்துகள் இல்லை: