ஞாயிறு, 31 ஜூலை, 2011

தந்தைக்கு கிரியை செய்த மகன் யாழில் பரிதாப மரணம்

ஆடி அமாவாசையான நேற்றைய தினம் இரவு தந்தையாருக்காக மோட்ச கிரியைகளை மேற்கொண்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று யாழ் வடக்கில் பதிவாகியுள்ளது. கோவிலில் பூஜை நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு கீரிமலை தீர்தக்கேணியில்

முழுகச் சென்ற நபரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மாணிப்பாய் சுதுமலையில் வசித்துவந்த 32 வயதான விஜிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளa ர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


கருத்துகள் இல்லை: