வவுனியாவிற்கும் கொழும்பு இரத்மலானைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவையொன்று இலங்கை விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவசர பணிகள் காரணமாக செல்பவர்களின் பயணத்தை இலகுபடுத்தும் நோக்கில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.
இப் போக்குவரத்திற்காக பயணி ஒருவரிடம் இருந்து ஒரு வழிக் கட்டணமாக ரூபா 6,600 அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக