வடமராட்சி, அல்வாய்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பெரும் கோஷ்டி மோதல் ஒன்றை நெல்லியடிப் பொலிஸார் முறியடித்துள்ளனர்.
தகவல் கிடைத்து குறிப் பிட்ட இடத்துக்குச் சென்ற பொலிஸார் சுற்றிவளைத்து 38 பேரைக் கைது செய்தனர்.
அல்வாய் வைரவர் கோயிலுக்குச் சமீபமாக அரிவாள், கத்திகள், அசிட் மற்றும் பொல்லுகள், தடிகளுடன் முட்டி மோதிக் கொள்ளத் தயாரான நிலையில் இளைஞர் கள் இருந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு எந்த வேளையிலும் மோதல் வெடிக்கலாம் என்ற நிலையில் ஊர்மக்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அல்வாய் வைரவர் கோயிலுக்குச் சமீபமாக அரிவாள், கத்திகள், அசிட் மற்றும் பொல்லுகள், தடிகளுடன் முட்டி மோதிக் கொள்ளத் தயாரான நிலையில் இளைஞர் கள் இருந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு எந்த வேளையிலும் மோதல் வெடிக்கலாம் என்ற நிலையில் ஊர்மக்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அதை அடுத்து பொலிஸார் அங்கு ஜீப்களில் விரைந்து வந்திறங்கி அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்துக் கொண்டனர். எவரும் தப்பி ஓட முடியாத நிலையில் அனைவரும் ஆயுதங்கள் சகிதம் சிக்கிக் கொண்டனர். ஆலய இசை நிகழ்ச்சி ஒன்றின் போது இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகலே இந்த மோதல் ஆயத்தத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது.
பொலிஸாரிடம் சிக்கிய 38 பேரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலை யில் ஆஜர் செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதி வான் 38 பேரில் 36 பேரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். ஏனைய இருவரும் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்ப மாகவுள்ள ஜீ.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருப்பதால் நீதவான் அவர்களை எச்சரித்து விடுவித்தார்.-நன்றி நெருடல் இணையம்-
வழக்கை விசாரித்த நீதி வான் 38 பேரில் 36 பேரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். ஏனைய இருவரும் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்ப மாகவுள்ள ஜீ.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருப்பதால் நீதவான் அவர்களை எச்சரித்து விடுவித்தார்.-நன்றி நெருடல் இணையம்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக