ஹிஜ்ரி 1432 புனித ரம்ழான் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் (1) திங்கட்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
புனித ரம்ழான் நோன்பை தீர்மானிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 06.31 மணி தொடக்கம் புனித ரம்ழான் மாதத்திற்கான தலைப் பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கிறது.
அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-5234044 2432110 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுசான் ஹஸன் கேட்டுக் கொள்கின்றார்.
உலமாக்கள் கதீப்மார்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமய கலாசார திணைக்கள ரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் பள்ளிவாசல் தக்கியாக்கள் சாவியாக்களின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
புனித ரம்ழான் நோன்பை தீர்மானிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 06.31 மணி தொடக்கம் புனித ரம்ழான் மாதத்திற்கான தலைப் பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கிறது.
அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-5234044 2432110 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுசான் ஹஸன் கேட்டுக் கொள்கின்றார்.
உலமாக்கள் கதீப்மார்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமய கலாசார திணைக்கள ரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் பள்ளிவாசல் தக்கியாக்கள் சாவியாக்களின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக