கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண வைபவம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து இரா.சம்பந்தன் அதனை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எஸ்.ஸ்ரீதரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதராதலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், பொன்.செல்வராசா உட்பட மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பிரமுகர்கள் உட்பட பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக