திங்கள், 1 ஆகஸ்ட், 2011

வடமாகாணத்தில் முதல் டிஜிட்டல் நூலகம் காரைநகரில் திறந்து வைப்பு

வடமாகாண பாடசாலைகளுக்கான டிஜிட்டல் நூலகத்தினை முதன்முதலாக காரைநகரில் கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. வித்தியாலய அதிபர் பொ.சிவானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போக்குவரத்து பிரதிஅமைச்சர் திரு.ரோஹண திசாநாயக்கா கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் பழையமாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போக்குவரத்துப் பிரதிஅமைச்சர் இன்று டிஜிட்டல் நூலகம் திறந்து வைக்கப்பட்டபோது காரைநகருக்கான இணையத்தள வசதிகள் எதுவும் இல்லாதது மிகவும் கவலையளிப்பதாகவும் இதனை உடனடியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்து காரைநகருக்கான இணையத்தள வசதியை மிகவேகமாக மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.






கருத்துகள் இல்லை: