பணிஸ் சாப்பிட்டவர் அதற்குள் இருந்த பல்லியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.அரியாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்தப் பணிசை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு யாழ். நீதிமன்றம் 3 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது.
குறித்த வியாபார நிலையத் தில் நான்கு பணிஸை வாங்கி அதில் ஒன்றை சாப்பிட்டு முடித்த பின்னர் மற்றைய பணிஸைச் சாப்பிடுவதற்குப் பிரித்தனர்.
இதன் போது அதற்குள் இறந்த நிலையில் பல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அவதானித்த அவர் கள் அந்தப் பணிஸை எடுத்தச் சென்று யாழ். மாநகரப் பொதுசுகாதாரப் பரிசோதகர்கரிடம் கொடுத்து சம்பவத்தை விளக்கியுள்ளனர்.
உடனே குறித்த கடைக்குச் சென்ற பொதுச் சுகாதாரப் பரி சோதகர்கள் அந்தக் கடையில் உள்ள சுகாதார நிலைமைகள் பற்றி ஆராய்ந்ததுடன் விசாரணை களையும் மேற்கொண்டனர்.ஒன்றுக்கு மேற்பட்ட பேக் கரிகளின் உற்பத்திகளைத்தான் கொள்வனவு செய்து விற்பனை செய்வதாக வியாபாரி கூறியுள்ளார்.
யாழ்.நகரில் உள்ள பிரபல பேக்கரி உட்பட பிறிதொரு பேக்கரியிலிருந்தும் தான் பணிஸ்களைக் கொள்வனவு செய்வதாக வியாபாரி கூறியுள்ளார்.
இதனையடுத்து யாழ்.நகரின் பிரதான வீதியில் சுகாதாரச் சீர்கேடான நிலையில் இயங்கிவந்த பேக்கரி ஒன்றையும் சுகா தாரப் பரிசோதகர்கள் இனங் கண்டனர்.
குறித்த வியாபார நிலையத் தில் நான்கு பணிஸை வாங்கி அதில் ஒன்றை சாப்பிட்டு முடித்த பின்னர் மற்றைய பணிஸைச் சாப்பிடுவதற்குப் பிரித்தனர்.
இதன் போது அதற்குள் இறந்த நிலையில் பல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அவதானித்த அவர் கள் அந்தப் பணிஸை எடுத்தச் சென்று யாழ். மாநகரப் பொதுசுகாதாரப் பரிசோதகர்கரிடம் கொடுத்து சம்பவத்தை விளக்கியுள்ளனர்.
உடனே குறித்த கடைக்குச் சென்ற பொதுச் சுகாதாரப் பரி சோதகர்கள் அந்தக் கடையில் உள்ள சுகாதார நிலைமைகள் பற்றி ஆராய்ந்ததுடன் விசாரணை களையும் மேற்கொண்டனர்.ஒன்றுக்கு மேற்பட்ட பேக் கரிகளின் உற்பத்திகளைத்தான் கொள்வனவு செய்து விற்பனை செய்வதாக வியாபாரி கூறியுள்ளார்.
யாழ்.நகரில் உள்ள பிரபல பேக்கரி உட்பட பிறிதொரு பேக்கரியிலிருந்தும் தான் பணிஸ்களைக் கொள்வனவு செய்வதாக வியாபாரி கூறியுள்ளார்.
இதனையடுத்து யாழ்.நகரின் பிரதான வீதியில் சுகாதாரச் சீர்கேடான நிலையில் இயங்கிவந்த பேக்கரி ஒன்றையும் சுகா தாரப் பரிசோதகர்கள் இனங் கண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக