மன்னார் கடற்படுக்கையில் நேற்று எண்ணெய் ஆய்வினை ஆரம்பித்திருப்பதாகவும், இங்கு எண்ணெய் அகழ்வு சாத்தியப்படுமானால் எண்ணெய் இறக்குமதிக்கு ஏனைய நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை எனவும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையில் எண்ணெய் அகழ்வு சாத்தியமானால், மத்திய கிழக்கைப் போன்று சில மேற்கு நாடுகளின் அச்சுறுத்தல்களை இலங்கை சந்திக்க நேரிடலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒரு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளம் இருப்பதாக கூறப்படும் மன்னார் கடற்படுக்கையில், மூன்று எண்ணெய்க் கிணறுகளைத் துளையிடுவதற்கு கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
எண்ணெய் தோண்டும் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், வணிக ரீதியான எண்ணெய் உற்பத்தி 2014 இல் ஆரம்பிக்க முடியும் என்று கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக