உன் கண்களாலே செய்த கல்லறை!!
நான் தந்த மலரோ உன் கூந்தலில் இன்னும் வாடவில்லை
நீட்டி நின்ற காதல் மடலோ இன்னும் கசங்கவில்லை,
எழுதித்தந்த கவிதையின் ரசனை இன்னும் குறையவில்லை
நடந்துசென்ற சாலையோரம் நம் பாத தடங்கள் இன்னும் அழியவில்லை,
அதற்குள் சொல்லிப்போனாயடி என்னை மறந்திடுங்கள் என்று
கண்களைக்காட்டி என் இதயத்தை குடைசாயத்து உன் கண்களாலே செய்துவிட்டாயடி எனக்கு ஒரு கல்லறை........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக