ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

சவுதியில் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இலங்கையர் மூவர் பலி


சவுதி அரேபியாவில் உள்ள  மக்கா – மதீனா பிரதான வீதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  மூன்று பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கல்முனை அலியார் வீதியை சேர்ந்த 44 வயதான தம்பிலெவ்வை போடியார் முகம்மட் மசூத், 40 வயதான றகுமத் ஜாஹி மற்றும் 10 வயதான லாபீர் மசூத் ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இக்குடும்பத்தினர் கடந்த 20 வருடங்களான சவுதி அரேபியாவின் றியாத் நகரில் பணியாற்றுபவர்களாவர்.
இவர்களின் நல்லடக்கம் சவுதி அரேபியாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: