வியாழன், 21 ஆகஸ்ட், 2014
புதன், 13 ஆகஸ்ட், 2014
மருதங்கேணியில் குடும்பப்பெண் மீது கடற்படைச் சிப்பாய் பலாத்காரத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் - கடற்படைத்தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்
| ||
|
வியாழன், 12 ஜூன், 2014
சட்டவிரோத கடற்றொழில் முற்றாகத் தடை உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் பணிப்பு
யாழ்.குடாநாட்டில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவோர் தொடர்பில் உரிய சட்டநடவடிக்கை எடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழிலாளர் திணைக்களப் பணிப்பாளருக்கும், கடற்படையினருக்கும் பொலிசாருக்கும் இன்றைய தினம் பணிப்புரை வழங்கியுள்ளார்.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் இன்றுமாலை பருத்தித்துறை வடக்கு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அமைச்சர் இப்பணிப்புரையை விடுத்தார்.
சட்டவிரோதமாக கடற்றொழில்களில் ஈடுபடுவோரினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்ட நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
இதற்கென மூவர் கொண்ட குழுவினை அமைத்துள்ள அமைச்சர் அவர்கள் இக்குழு கடற்படையினர் பொலிசார் மற்றும் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பணித்துள்ளதுடன் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் கடற்றொழிலாளர்களைத் தடுப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளார்.
வான் அகழ்வுப் பணிகள் தொடர்பில் இங்கே விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் தற்போது முனை பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
வெளிச்சவீடுகள் புனரமைப்பு தொடர்பில் அவதானஞ் செலுத்தப்பட்டதுடன், காரைநகர், நெடுந்தீவு, யாழ்ப்பாணம், ஆகிய பதிகளில் வெளிச்ச வீடுகளை அமைக்க இனங்காணப்பட்டுள்ளதுடன் வெற்றிலைக் கேணி மற்றும் குடாரிப்பு பகுதிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம், தற்போது குருநகர் மற்றும் இன்பசிற்றி ஆகிய பகுதிகளில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் புதிய மீன்பிடித்துறைமுகங்களை அமைப்பது குறித்தும் வரலாற்று ரீதியிலான மீன்பிடித்துறைமுகங்களை மீளப் பெறுவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
மேலும் சட்டவிரோத கடற்றொழில்களை நிறுத்துவது என்றும் மண்ணெண்ணை மானியத்திற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் அவர்கள் பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் திணைக்களம் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கினார்.
கடற்றொழில் திணைக்கள உத்தியோகஸ்தர் பற்றாக்குறை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள், கடற்றொழிலாளர்களுக்கு வங்கிக்கடன் பெற்றுக் கொடுப்பது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், பருத்தித்துறை கிழக்கு பிரதேச செயலர் திருலிங்கநாதன், கரவெட்டி பிரதேச செயலர் சிவசிறி, பொலிஸ், இராணுவ மற்றும் கடற்படை உயரதிகாரிகள், ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன், கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சம்மேளன சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 18 மே, 2014
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனித நேயத்துடன் முள்ளிவாய்க்கால் இழப்புக்களை நினைவு கூருவோம்
சுமார் மூன்று தசாப்தங்களாக எம் இனத்தை அழித்து வந்த யுத்தத்தை முள்ளி வாய்க்காலுக்குள் முடிவுகண்ட நாளே இந்த மே 18.
இது எம் இனத்தின் வாழ்வியலிலிருந்து மறைக்கவோ மறுக்கப்படவோ முடியாத ஒரு நாள். நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டு அமைதியாக வாழ்ந்த தமிழ் மக்களது வாழ்வியலை, இலக்கை அடைய முடியாத, வழி தவறிய போராட்டத்தின் மூலம் உறை நிலைக்குக் கொண்டு சென்ற மறக்க முடியாத நாள் இது.
வழிதவறி தடம்புரண்டுபோன எமது போராட்டமானது சொல்லொணா துன்பங்களையும் வாழ்வியலின் இருப்பையும் அடியோடு புதைத்து அதள பாதாளத்துக்;குள் எம்மக்களை தள்ளிவிட்டுள்ளது. இதற்குள் அகப்பட்டு மடிந்து போன மானிட உயிர்களோ ஏராளம்.
மரணித்த உறவுகள் யாவும் எமது இனத்தின் உறவுகளே. இந்த நினைவுகூரலை வருடந்தோறும் முன்னெடுக்கும் எம்மவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எந்த விதமான இடையூறுகளும் ஏற்படுத்தாது இந்த நாள் நினைவு கூறப்படவேண்டும் என்பதே நிலைப்பாடாகும்.
எனவே எமது மக்களின் இருப்பையும் வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் எம்மக்களின் வாழ்விடச்சூழலில் மனித உரிமைகளை மதிக்கும் நிலமைகள்; ஏற்படுத்தப்பட்டு கடந்த காலத்தின் அவலத்திலிருந்து எமது மக்கள் மீண்டௌவேண்டும்.
இதற்காக நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகும். கடந்த காலத்தின் அவலங்களிலிருந்து மீண்டெழவென எம்மக்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் இனி வரும் காலங்களில் எம் இனத்திற்கு நிம்மதியான, அமைதியான வாழ்வை உத்தரவாதம் செய்வதாக அமைய வேண்டும் என்பதே பெருவிருப்பாகும்.
இது எம் இனத்தின் வாழ்வியலிலிருந்து மறைக்கவோ மறுக்கப்படவோ முடியாத ஒரு நாள். நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டு அமைதியாக வாழ்ந்த தமிழ் மக்களது வாழ்வியலை, இலக்கை அடைய முடியாத, வழி தவறிய போராட்டத்தின் மூலம் உறை நிலைக்குக் கொண்டு சென்ற மறக்க முடியாத நாள் இது.
வழிதவறி தடம்புரண்டுபோன எமது போராட்டமானது சொல்லொணா துன்பங்களையும் வாழ்வியலின் இருப்பையும் அடியோடு புதைத்து அதள பாதாளத்துக்;குள் எம்மக்களை தள்ளிவிட்டுள்ளது. இதற்குள் அகப்பட்டு மடிந்து போன மானிட உயிர்களோ ஏராளம்.
மரணித்த உறவுகள் யாவும் எமது இனத்தின் உறவுகளே. இந்த நினைவுகூரலை வருடந்தோறும் முன்னெடுக்கும் எம்மவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எந்த விதமான இடையூறுகளும் ஏற்படுத்தாது இந்த நாள் நினைவு கூறப்படவேண்டும் என்பதே நிலைப்பாடாகும்.
எனவே எமது மக்களின் இருப்பையும் வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் எம்மக்களின் வாழ்விடச்சூழலில் மனித உரிமைகளை மதிக்கும் நிலமைகள்; ஏற்படுத்தப்பட்டு கடந்த காலத்தின் அவலத்திலிருந்து எமது மக்கள் மீண்டௌவேண்டும்.
இதற்காக நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகும். கடந்த காலத்தின் அவலங்களிலிருந்து மீண்டெழவென எம்மக்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் இனி வரும் காலங்களில் எம் இனத்திற்கு நிம்மதியான, அமைதியான வாழ்வை உத்தரவாதம் செய்வதாக அமைய வேண்டும் என்பதே பெருவிருப்பாகும்.
புதன், 14 மே, 2014
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்புனேரியார் தேவாலயசிரமதான நிகழ்வில் 12/05/2014
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்புனேரியார் தேவாலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிரமதான நிகழ்வில் கலந்து கொண்ட ஈழமக்கள் ஜன நாயகக்கட்சி வடமராட்சி அமைப்பாளர் ரங்கன் மற்றும் வடமராட்சி கரையோர அமைப்பாளர் இரட்ணகுமார் அவர்களோடு பங்கு தந்தையும் விளையாட்டு கழக அங்கத்தவர்களும்
சனி, 10 மே, 2014
குடத்தனை பகுதியில் இருந்து இடம் பெயர்கின்றது மருதங்கேணி பிரதேச செயலக உப பணிமனை
8/5/2014 மாலை 6.45 மணியளவில் திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றால் குடத்தனை பகுதியில் அமைந்திருக்கும் மருதங்கேணி பிரதேச செயலக உப பணிமனை சேதமுற்றது.. ஆட்பதிவு பிரிவு பகுதியில் இருந்த கணனிகள் மற்றும் ஆவணங்கள் மழையால் நனைந்தும் சேதமுற்றுள்ளது. எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.ஆட்பதிவு பிரிவு பகுதி கூரைகள் காற்றால் சுமார் 70 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டது. பெரும்பாலான பிரிவுகள் நிரந்தரமாக மருதங்கேணி பகுதியில் அமைந்திருக்கும் தலைமை செயலகத்துக்கு இடம் மாற்றும் செயற்பாடுகள் நடைபெறுவதை நேரடியாக அவதானிக்க கூடியதாகவுள்ளது
திங்கள், 28 ஏப்ரல், 2014
இனிவரும் காலங்கள் எமக்கான காலங்கள்" உடுத்துறை விளையாட்டு நிகழ்வில் தோழர் உதயன்
மருதங்கேணி பிரதேசமானது கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் போன்றவற்றினால் மக்களுடைய பொருளாதாரத்திலும் அடிப்படை வசதிகள், கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்றும் பின்தள்ளப்பட்டவையாக இருந்து விடமுடியாது மக்களின் பௌதீக தேவைகள் உட்பட வாழ்வாதார தொழில்கள், கல்வி மற்றும் துறைசார் செயற்பாடுகள் அனைத்தையும் கட்டியெழுப்ப வேண்டியவர்களாக நாம் உள்ளோம் என ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்தார்.
மருதங்கேணி பிரதேச இளைஞர் கழக சம்மேளன வருடாந்த இளைஞர் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
நாம் கடந்து வந்த பாதைகள் வலிகளும் சுமைகளையும் தாங்கியவையாக இருந்தாலும் தற்கால சிறார்களை கல்வியறிவிலும் துறைசார் ரீதியான செயற்பாடுகளிலும் வளர்த்தெடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் பிள்ளைகளின் வாழ்க்கை நிலை ஒளிமயமாக மாற்றமடையும். அத்துடன் இளைஞர் சக்தி ஓர் நாட்டின் இன்றியமையாததாக அமைகிறது எனவே அவர்களின் உழைப்புக்களை யாரும் தமது நலன்களுக்காக சுரண்டி விட இடமளிக்காத வகையில் எமது பிரதேசங்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கும் எதிர்காலச்சந்ததிக்கு முன்னுதாரணமாகவும் இளைஞர் சக்தியானது செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டதுடன் இவ்வாறான இளைஞர் கழகங்கள் மற்றும் இளைஞர் கழக சம்மேளனங்களின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு என்றும் எமது உறவுக்கரம் கொடுப்போம் எனத்தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவருமான சிறிரங்கேஸ்வரன், பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் பூ.சஞ்ஜீவன், வலிகாமம் தெற்கு பிரதேசசபை எதிர்கட்சித்தலைவர் இ.அரிகரன் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் ஐ.தபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வியாழன், 24 ஏப்ரல், 2014
பருத்தித்துறை சாலை கலந்துரையாடல்
இன்று மாலை 7 மணியளவில் வடபிராந்திய போக்குவரத்து துறையின் பருத்தித்துறை சாலை பிரிவினருடானான சந்திப்பு சாலை முகாமையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் ரங்கனோடு வடமராட்சி கரையோர அமைப்பாளர் இரட்ணகுமார் அவர்களும் பங்கு கொண்டார்.சாலையின் தொழிற்சங்க பிரதி நிதிகளும் ஊழியர்களும் கலந்துகொண்டதோடு பருத்தித்துறை சாலையின் மேம்பாடு குறித்தும் ஊழியர்களின் நலன்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதோடு மக்களுக்கான சிறந்த சேவை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது
திங்கள், 14 ஏப்ரல், 2014
வெள்ளி, 21 மார்ச், 2014
எங்களின் மக்கள் தேவைகள் நிச்சயமாக மத்திய அரசூடாக நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும் ( நாகர்கோவில் மக்கள் சந்திப்பில் தோழர் ரங்கன் ) 21/03/2014
இன்று மாலை 4 மணியளவில் மேற்படி சந்திப்பு நாகர்கோவில் மேற்கு பகுதியில் கடற்தொழிலாளர் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது.இதில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கரையோர பொறுப்பாளர் குமார் அவர்களும் கலந்து கொண்டார் ,தொடர்ந்து மக்கள் மத்தியில் கருத்துரை வழங்கிய தோழர் ரங்கன் " மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நாகர்கோவில் கிராம தேவைகள் நிச்சயமாக நாங்கள் நிறைவேற்றி தருவோம். அத்துடன் உங்களின் கிராமத்துக்கான மின் விநியோக செயற்பாட்டுக்கான மதிப்பீட்டு அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது விரைவாக விநியோக செயற்பாட்டுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் நடைபெறும் எனவும்.வட மாகாண சபை வெறும் தீர்மானங்கள் நிறைவேற்றும் சபையாக உள்ளதே தவிர மக்களுக்கான எந்தவிதமான செயற்பாடுகளையும் ஆறு மாதங்களாக நிறைவேற்ற வில்லை என்பதையும் தெளிவுபடுத்தி கூறியதோடு மக்களாகிய நீங்கள் ( தேசியம் பேசுபவர்களால் )ஏமாற்றப்பட்டதை நீங்களாகவே புரிந்து கொள்ளுவீர்கள் ஆனாலும் எங்களின் செயற்பாடுகள் திட்டமிட்டபடி மக்கள் நலன்சார்ந்து மேற்கொள்ளப்படும் .அத்தோடு உங்களின் தேவைகள் உரியவாறு உங்களை வந்தடைய மத்திய அரசாங்கத்தூடாக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் கூறினார். இச்சந்திப்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உடனடியாகவே வழங்கப்பட்டது.
புதன், 19 மார்ச், 2014
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015
ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள துயரம் கடுகளவாக குறைந்து விடுவதுடன் மட்டுமல்லாமல், குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும். துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம். இனி பன்னிரெண்டு இராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை குரு பகவான் தந்தருளுவார் என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். மேஷ இராசி அன்பர்களே… உங்களுக்கு குரு பாக்கிய-விரயாதிபதி ஆவார். அவர், 19.6.2014 வியாழன் அன்று மிதுனத்தில் இருந்து கடக இராசிக்கு பிரவேசிக்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு செல்லும் குரு யோகத்தை வாரி வழங்க போகிறார். உங்கள் இராசிக்கு 8-ம் இடம், 10-ம் இடம், 12-ம் இடங்களை குருபார்வை செய்வதால், தடைபட்ட திருமணம் நடக்கும். தொழில் உத்தியோகம் சிறப்பாக அமையும். விரயங்கள் தவிர்க்கப்படும். பொதுவாக குரு 4-ம் இடத்தில் அமர்ந்தால் உங்கள் இராசிக்கு யோகத்தை கொடுப்பார். எப்படியெனில், திரிகோணாதிபதி கேந்திரத்தில் அமர்ந்தால் வராத பணமும் கைக்கு டக்கென்று வந்து விடும். அதுமட்டுமல்ல, 4-ம் இடத்தை குறிக்கும் வீடு, வாகனம், கல்வி அத்தனையும் அவன் அருளால் உங்களை வந்தடையும். 8-ம் இடத்தை பார்வை செய்வதால், இதுவரையில் இழுத்துக்கொண்டு வந்த வழக்கு பிரச்னை தீர்வுக்கு வரும். உறவினர் வருகையால் நற்செய்தி, கேளிக்கை, ஆடம்பர செலவு அதிகமாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தாயாருக்கு உடல் நலக்குறைவு இருந்தாலும் பிணி நீங்கும். கடந்த ஆண்டு மூன்றாம் இடத்திலிருந்த குரு பகவான் அவ்வளவு திருப்தியான நன்மையை செய்யவில்லை என கவலையில் இருந்திருக்கலாம். தேவையில்லா பகை, விரயம், மனக்குழப்பத்தை கொடுத்து இருந்தாலும், தற்காலம் அவர் 4-ம் இடத்திற்கு வருவதால், இனி உங்களுக்கு நல்ல நேரமே. இருப்பினும் சிறு விஷயத்தை மட்டும் கவனத்தில் வைத்திருங்கள். அது என்னவெனில், வாகனத்தை ஓட்டும் போது மட்டும் சற்று நிதானம் தேவை. கடக குரு உச்சம் பெற்ற குரு. ஆகவே நன்மைகள் உங்களை தேடி, நாடி வரும். குரு பெயர்ச்சி அன்று விநாயகப்பெருமானையும், தட்சிணா மூர்த்தியையும், குருபகவானையும் வழிபடுங்கள். அன்று காலை முதலில் விநாயகரை வணங்கிவிட்டு, உற்சாகமாக உங்கள் வேலையை தொடங்குங்கள். சோதனைகள் பறந்துவிடும். சாதனைகள் உங்களை வந்தடையும். ஸ்ரீகஜலஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். ரிஷப இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு 3-ம் இடத்திற்கு 19.6.2014 வியாழன் அன்று, குரு பகவான் பிரவேசிக்க போகிறார். 3-ம் இடம் கீர்த்தி ஸ்தானம் என அழைக்கப்படும் இடமாகும். தற்காலம் 2-ம் இடத்தில் இருக்கும் குரு, கீர்த்தி ஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடத்திற்கு செல்வதால் நன்மையா, தீமையா? என்று பட்டிமன்றம் வைத்தால், 3-ஆம் இடம் நன்மை இல்லை என்று சிலர் கூறலாம், எழுதலாம். ஆனால் என்னை பொறுத்தவரையில் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்குரிய குரு பகவான், 3-ஆம் இடத்திற்கு செல்லுவது “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜயோகம்” என்கிற ஜோதிட விதிப்படி யோகமே ஆகும். ஆகவே உங்கள் இராசிக்கு 8-க்கும், 11-க்கும் உரிய குரு பகவான், 3-ம் இடத்தில் அமர்ந்து, உங்கள் இராசிக்கு 7-ம் இடம், 9-ம் இடம், 11-ம் இடங்களை பொன்னான பார்வை செய்வதால், அவ்விடங்கள் மகா பலம் பெற்று வாரி வழங்க இருக்கிறது. 7-ம் இடம், திருமணத்தை குறிக்கும் இடம். 9-ம் இடம் பாக்கியம் கொடுக்கும் இடம். 11-ம் இடம் லாபத்தை கொடுக்கும் இடம். தடைபட்ட திருமணம் நடைபெறும். பழைய சொத்துக்கள் வந்தடையும். மேலதிகாரியின் உதவிகள் தேடி வரும். கடல் கடந்து செல்லும் பாக்கியம் வரும். அன்னியர்கள் நட்பும், அதனால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். அதுமட்டுமல்ல, கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல திருப்பமும் வரும். பெற்றோர்களால் உங்களுக்கு சில நன்மைகள் வந்தடையும். திருமணம் ஆனவர்களுக்கு மனைவி மூலமாக ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதரர், சகோதரி இருப்பின் அவர்களால் சில நன்மைகளைப் பெறுவீர்கள். பொதுவாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்கினாலும் கூட, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், வாக்குறுதியை யாருக்கும் வாரி கொடுக்க வேண்டாம். தேவையில்லா செலவு வரும். அதனை கட் செய்யுங்கள். பிறகென்ன அன்பவர்களே… உங்களுக்கு யோகமோ யோகம்தான். ஆனைமுகனையும், தட்சிணாமூர்த்தி மற்றும் குருபகவானையும் வணங்குங்கள். தொட்டது துலங்கும். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். மிதுன இராசி அன்பர்களே… 19.6.2014 வியாழன் அன்று உங்கள் ஜென்ம இராசியை விட்டு 2-ம் இடத்திற்கு குரு பகவான் பிரவேசிக்க போகிறார். குரு உங்கள் இராசிக்கு 7,10-க்குரியவன். அதாவது சப்தமாதிபதி, ஜீவனாதிபதி. உங்கள் இராசிக்கு 2-ல் அமரும் குரு, 6-ம் இடம், 8-ம் இடம், 10-ம் இடங்களை பார்வை செய்ய போகிறார். 6-ஆம் இடம் என்பது, கடன், நோய்நொடி அறியப்படும் இடமாகும். அவை தீரப்போகிறது. 8-ம் இடம் வழக்கு தொல்லைகள் அறியப்படும் இடமாகும். வீண் வழக்குகள் விலகப் போகிறது. 10-ம் இடம் தொழில்துறையை பற்றி அறியப்படும் இடமாகும். தொழில், வியபாரம் புத்துணர்ச்சி பெற்று பிரமாதமாக நடக்க இருக்கிறது. சொத்துக்கள் மீது வழக்கு இருந்தாலும் குருவின் பேரருளால் வெற்றி பெறும். நீண்ட நாட்களாக இருந்த பங்காளி சண்டைகளும் சுமுக தீர்வுக்கு வரும். தடைபட்ட கல்வி தொடரும். பயணங்கள், அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் அதனால் நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். உத்தியோகம் செய்பவர்கள் உயர் அதிகாரிகளிடம் விரோதம் செய்யாமல் அனுசரித்து போவது நல்லது. சிலருக்கு உத்தியோக மாற்றம் ஏற்படலாம். 6-ம் இடத்தை குரு பார்வை செய்வதின் காரணமாக, யாருடைய ஜாமீனுக்கும் துணை போக வேண்டாம். தேவையில்லாமல் மற்றவர்களின் பிரச்னையில் தலையிடவும் வேண்டாம். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு 2-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், புத்திர-புத்திரிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைப்பார். பாக்கிய ஸ்தானத்திற்கு விரயஸ்தானத்தை குரு பார்வை செய்வதால், பெற்றோரின் உடல்நலனுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டிய காலம் இது. சகோதரஸ்தானத்திற்கு 6-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், அவர்களிடம் மனக்கசப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக 2-ம் இடத்தில் உள்ள குரு நன்மைகளையே செய்தாலும் கூட, அவசரமாக எதையும் சிந்திக்காமல் செய்ய வேண்டாம். அகலகால் வைக்க வேண்டாம். 10-ஆம் இடத்தை குரு பார்வை செய்வது நன்மைதான். ஆனால் பெரும் முதலீடு செய்யாமல் நிதானமாக செய்வது நன்மையை தரும். பிள்ளையாரை வணங்குங்கள். தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி வழிபட்டு முன்னேறுங்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். கடக இராசி அன்பர்களே… 19.6.2014 அன்று, குரு பகவான் உங்கள் இராசியில் வந்து அமரப்போகிறார். (ஜென்ம குரு). “பொதுவாக வனவாசம் போன இராமருக்கு ஜென்ம குரு” என்பார்கள். இதை கேள்விபட்டு பயந்துவிடாதீர்கள். உங்கள் இராசியில் குரு அமரப்போகிறார் என்றால், குரு பகவான் உங்கள் இராசிக்கு யார்?. 9-ஆம் அதிபதிக்குரியவர். அதாவது பாக்கியாதிபதி. கோடீஸ்வரன் உங்களுடன் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும். வணங்காதவர்களும் உங்களுக்கு வணக்கம் சொல்வார்கள். ஆகவே ஜென்ம குரு உங்களுக்கு நன்மைகள் வாரி வழங்குவார். காரணம் உச்சம் பெற்றவர், அச்சத்தை போக்குவார். உங்கள் இராசிக்கு 5-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் அதாவது புத்திரஸ்தானம், சப்தமஸ்தானம், பாக்கியஸ்தானம் இவைகள் அனைத்தும் FULL POWER பெற்றுவிட்டது. இழுபறியாக இருந்த பிள்ளைகளின் திருமணம் டக்கென்று நடக்கும். மனைவியால் நன்மைகள் நடக்கும். அல்லது திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கூட்டாளிகளால் நல்ல லாபம் கிடைக்கும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் புது வீட்டில் குடிபுக குரு பகவான் அருள் செய்வார். பொதுவாக 5-ம் வீட்டை குரு பார்த்தால், பள்ளத்தில் விழுந்தவன் பல்லாக்கில் அமர்வான். பெரும் சோதனைகளை கண்ட நீங்கள் ஆனந்தமான வாழ்க்கை வாழப்போகிறீர்கள். சிலர் ஜென்ம குரு நன்மை செய்யாது என்று கூறினாலும் கவலைப்படாதீர்கள். அவர் (குரு) பார்வை சுபஸ்தானங்கள் மீது விழுகிறது ஆகவே அந்த ஸ்தானங்கள் உங்களுக்கு நன்மைகளையே செய்யும். பல காலமாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். இந்த குருபெயர்ச்சி சில நேரங்களில் உடல்நலனில் தொல்லைகள் கொடுத்தாலும், கவலைப்படதீர்கள். காரணம் அவன் 6-க்குரியவன். சிறு பிரச்னைகள் கொடுத்தாலும் அவனே 9-க்குரியவனாகவும் இருப்பதால், உடல்நலனில் பெரும் தொல்லைகளை தர மாட்டார். ஸ்ரீதனலஷ்மியின் அருள்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் அத்துடன் குருபகவானையும் வணங்கி வேலையை தொடங்குங்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். சிம்ம இராசி அன்பர்களே… 19.6.2014 வியாழன் அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு வந்து அமர்கிறார். அதாவது கடகத்தில் பட்டா போட்டு அமரப் போகிறார். “அய்யய்யோ 12-ல் குரு இருக்கலாமோ” என்று சிலர் பயப்படுவர். பயமே வேண்டாம். அந்த குருபகவான் உங்கள் இராசிக்கு 5-ம் வீடு, 8-வீட்டின் அதிபதி. ஆகவே 8-க்குரிய குரு, 12-ல் வந்தால் இராஜயோகத்தை கொடுப்பார். அதாவது 8-க்குரியவன் 12-ல் வந்தால், “விபரீத இராஜயோகம்”. இனி தொட்டது துலங்கும். உங்களை தூக்கி எறிந்தவர்கள், உங்கள் முன் தலை வணங்குவார்கள். குரு உங்கள் இராசிக்கு 4-ம் இடம், 6-ம் இடம், 8-ம் இடங்களை பார்வை செய்து, அந்த இடங்களை யோகம் பெறச் செய்கிறார். ஆகவே தடைபட்ட மேல் படிப்பு தொடரும். தகர டப்பா வண்டியை ஒரங்கட்டிவிட்டு, புதிய வாகனம் வாங்கும் யோகும் உண்டு. சொந்த வீடு இல்லையே என்ற புலம்பல் தீரும். கடன் தொல்லை பெரும் அளவில் தொலையும். தீராத ரோகம் தீரும். கோர்ட், கேஸ் இவைகளில் வெற்றி கொடுக்கும். இருப்பினும், பூர்வீக சொத்து இருந்தால் அதனால் பிரச்னை வர வாய்ப்புள்ளது. குடும்ப ஸ்தானத்திற்கு லாபத்தில் குரு இருப்பதால், குடும்ப வாழ்க்கை அமையும். தெய்வ தரிசனம் அதிகரிக்கும். பிரயாணங்கள் அதிகரிக்கும். ஜீவனத்திற்கு 7-ம் இடம் பார்வை பெறுவதால், பங்கு வர்த்தகத்தில் யோகத்தை கொடுக்கும். கூட்டுதொழில் லாபம் உண்டு. புத்திரஸ்தானத்திற்கு 4-ம் இடம் குரு பார்வை பெறுவதால், புத்திர- புத்திரிகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். முக்கியமாக கஷ்டங்களை கொடுக்கும் அஷ்டம ஸ்தானம், குருவின் பார்வை பெறுவதால் வரும் கஷ்டங்கள் காற்றோடு ஓடி விடும். உறவினர் வருகையும், அவர்களால் ஆதாயமும் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் எதிர்பாராமல் நடக்கும். பொதுவாக 12-ல் அமர்ந்த குரு, வதைக்க மாட்டார். வாழ வழி வகுப்பார். இது என் கருத்து. ஸ்ரீவீரலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது. விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி முன்னேறுங்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். கன்னி இராசி அன்பர்களே… 19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்திற்கு வருகிறார். 11-ம் இடம் லாபஸ்தானம். இனி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். அப்படி ஒரு யோகம் அடிக்க போகிறது. உங்கள் இராசிக்கு 4-ம் வீடு, 7-ம் வீட்டின் அதிபதி குரு. அதாவது சுகாதிபதி, சப்தமாதிபதி குரு பகவான். அவர் உங்கள் இராசிக்கு லாபத்தில் அமர்வதால், தடைப்பட்ட காரியங்கள் கைகூடும். உங்கள் இராசிக்கு 3-ம் இடம், 5-ம் இடம், 7-ம் இடத்தை பார்வை செய்வதால், அந்த இடங்கள் சுபிக்ஷம் அடைந்து நன்மைகளை கொடுக்கப்போகிறது. 3-ம் இடம் கீர்த்தி ஸ்தானம். உங்கள் செல்வாக்கு உயரும். இதுவரையில் அபகீர்த்தி அனுபவித்த சிலர் பெருமைப்பட பேசப்படுவர். முடியாத காரியமும் முழு முயற்சியால் முடிப்பீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வை செய்வதால், பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் இருந்தால் விலகி உங்கள் கைக்கு வரும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்ச்சி நடக்கும். திருமணம் ஆகுமா என்று ஏங்கி கொண்டு இருந்தவர்களுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். மனைவியால் நல்ல யோகம் உண்டு. பொதுவாக 11-ம் இடம் நல்ல யோகமான இடம். ஆகவே பல வழிகளில் நன்மைகள் நாடி வரும். கடல் கடந்து போகும் பாக்கியமும், வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் கிடைக்கும். இதுவரை தடைபட்ட கட்டட வேலை மட, மடவென எழும். இவ்வளவு நன்மைகள் செய்ய கூடிய குரு பகவான் சில விஷயங்களில் உங்களை கவனமாகவும் இருக்கச் சொல்கிறார். அதாவது வழக்கு இருந்தால் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். நீயா-நானா என ஈகோ பார்க்க கூடாது. உடல்நலனில் கவனம் தேவை. பெற்றோர் வசம் சுமுகமாக இருக்க வேண்டும். கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கிவிட்டு முன்னேற காலடி எடுத்து வையுங்கள். ஸ்ரீகஜலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது. குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். துலா இராசி அன்பர்களே… 19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். உங்கள் இராசிக்கு 3-ம் இடம், 6-ம் இடத்தின் அதிபதியான குரு பகவான், 10-ம் இடத்திற்கு வருவது நன்மையே. அதுவும் உச்சமாக அங்கு அமர்ந்து விடுகிறார். உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்னும் 2-ம் இடமும், சுகஸ்தானம் என்னும் 4-ம் இடமும், ரோகஸ்தானம் என்கிற 6-ஆம் இடத்தையும் குரு பார்வை செய்வதால், அந்த இடங்கள் தீமைகள் குறைந்து நன்மைகள் நடக்க வழி செய்ய காத்திருக்கிறது. உங்கள் இராசிக்கு 2-ம் இடத்தை குரு பார்வை செய்வதால், பெரும் உதவிகள் தேடி வரும். கைக்கு கை பணம் வரும். பொருளாதர வசதி பெருகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியத்தை பேசியே சாதித்துவிடுவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். சொந்த வாகனம் வாங்கி அமர்க்களமாக நிறுத்துவீர்கள். கல்வி உயரும். மேற்படிப்பு, பட்டப்படிப்பு பிரமாதமாக தொடரும். 6-ம் இடத்தை பொறுத்தவரையில் கடன், வழக்கு, ரோகம் இவை அனைத்தும் காணாமல் போய்விடும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் நடக்கும். வீடு, மனை வாங்கும் யோகமும் அமையும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வர வாய்ப்புள்ளது. இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், புத்திர பாக்கியத்தை குருவின் அருளால் கிடைக்கப்பெறுவீர்கள். மனக்குழப்பம் தீரும். சண்டை, சச்சரவு தீரும். பொதுவாக, “பதவி போனவனுக்கு 10-ல் குரு” என்பார்கள். அதை பற்றி துளியளவும் கவலைக்கொள்ளவேண்டாம். காரணம், 3-ம் இடம், 6-ம் இடதின் அதிபதி, கேந்திரத்தில் இருந்தால் யோகத்தையே செய்வார். சோகத்தை கொடுக்க மாட்டார். சரி இவ்வளவு நன்மைகளை செய்யும் குரு பகவான், ஏதாவது பிரச்னையும் தருவாரா? எனக் கேட்டால், ஆம். கூட்டு தொழிலில் கவனமாக இருக்க சொல்கிறார். ஆவேசம், பரபரப்பு அடக்கி வையுங்கள். தேவையில்லா பேச்சு வேண்டாம். சாந்தமாக இருந்தால், சகலமும் உங்கள் வீடு தேடி வரும். ஸ்ரீமகாலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். விருச்சிக இராசி அன்பர்களே… 19.6.2014 அன்று குருபகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு குடிபுக போகிறார். “ஓடியவனுக்கு ஒன்பதில் குரு” என்று சிலர் தவறாக கூறுவார்கள். ஓடினவனுக்கு அல்ல, ஓட்டினவனுக்கு என்பதே சரி. அதாவது பல விதமான பிரச்னைகளை ஓட்டிவிட்டவனுக்கு ஒன்பதில் குரு. ஆகவே இந்த குரு பெயர்ச்சியால் பல பிரச்னைகளை ஓட்டி வெற்றி பெற போகிறீர்கள். உங்கள் இராசிக்கு தன, பஞ்சமாதிபதி அதாவது 2-ம் வீடு, 5-ஆம் வீட்டின் அதிபதி, 9-ம் இடத்தில் அமர்வது பிரமாதமான யோகமே. உச்சத்தில் அமர்ந்த குரு உங்கள் ஜென்மத்தை பார்க்கிறார். 3-ம் இடமான கீர்த்தி ஸ்தானத்தை பார்வை செய்கிறார். 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். பொதுவாக நல்ல யோகத்தை ஜாதக கட்டத்தில் சில இடங்கள் கொடுக்கிறது. இந்த 5-ம் இடம் குருவின் பார்வை பெற்றதால், முன்னேற்றத்தில் இருந்த முட்டுகட்டை அகலும். தேவையான வசதி பெருகும். இதுவரை இருந்த அலைச்சல், விரயம், அவப்பெயர் அகலும். உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும். உயர்பதவியும், குடும்பத்திற்கு தேவையான எல்லா வசதிகளும் வந்தடையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். தடைபட்ட திருமணம் நடைபெறும். வாடகை வீட்டில் இருந்து, சொந்த வீடு செல்ல வழி வகுக்கும். விரோதிகளும் அடி பணிவர். பொதுவாக நீங்களே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வசதிகள் பெருகும். பலநாட்கள் ஏன், பல மாதங்கள் கடன்காரர்களிடம் கைகட்டி கொண்டு இருந்த நீங்கள், கடனை தூக்கி எறிவீர்கள். வாகன வசதி உண்டாகும். தந்தை வழியில் சில உதவிகள் கிடைக்கும். செய்யும் தொழிலில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வசதி பெருகும். புதிய கூட்டாளி வர வாய்ப்புள்ளது. மேல் படிப்பு, பட்டப்படிப்பு தொடரும். வேலை வாய்ப்பு தேடி வரும். சரி, குரு பகவான் என்ன எச்சரிக்கிறார் என்றால், “வரும் பணத்தை பிடித்து வையுங்கள். பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யாதீர்கள்.” இவைதான் 9-ம் இடதின் குரு பகவான் உங்களுக்கு சொல்லும் ஆலோசனை. விநாயகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வழிபடுங்கள். ஐஸ்வரிய லஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். தனுசு இராசி அன்பர்களே… 19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். “குரு அஷ்டமத்தில் வருகிறாரே அகப்பட்டோமடா சாமி” என்று அலற வேண்டாம். குரு உங்கள் ஜென்மாதிபதியும், சுகாதிபதியும் ஆவார். 8-ம் வீட்டில் அமர்ந்தாலும் அவர், 12-ம் இடம், 2-ம் இடம், 4-ம் இடத்தை பார்வை செய்வதால், இந்த இடங்கள் உங்களுக்கு நன்மைகளை வரங்களாக தர காத்திருக்கிறது. விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், “சுண்டைக்காய் கால், பணம் சுமைக்கூலி முக்கால் பணம்” கதையாக இருக்கும். அதாவது நாலணா சுண்டைக்காய் வாங்கி விட்டு, அதை சுமந்து கொண்டு வந்தவனுக்கு 4 ரூபாய் கூலி என்பார்கள். இப்படிபட்ட வீண் செலவு, ஆடம்பர செலவு குறையும். குடும்பத்தில் திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். உங்கள் பேச்சு மதிப்பு பெற்று, அதனால் வருமானம் கிடைக்கவும் செய்யும். உயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பால் நன்மைகள் தேடி வரும். பழைய இருப்பிடம் இடிக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். வாகன வசதி பெறும் பாக்கியம் உண்டு. சகோதர – சகோதரி ஒற்றுமை மேலோங்கும். குடும்ப கோர்ட்டில் பிரச்னை இருந்தால் தீரும். பல நாட்களாக இருந்த உறவினர் பகை அகலும். சிலருக்கு வேலைவாய்ப்பு தேடி வரும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. மனைவிக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது. சிலர், “அஷ்டம குரு படாதபாடு படுத்திவிடும்” என்பார்கள். கவலையோ, பயமோ அடைய தேவையில்லை. 8-ல் குரு இருந்தாலும், 2-ம் இடம், 4-ம் இடம் ஆகியவை அருமையான பார்வை பெற்று, பவர் ஆகிவிட்டது. ஆகவே பிரச்னைகள் ஐஸ்கட்டி போல் கரைந்து விடும். சரி, 8-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் முன்னேச்சரிக்கைகாக சொல்லும் ஆலோசனை என்ன என கேட்டால், “பயணங்களில் கவனம் தேவை. உடல்நலனில் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்” என்பதே ஆலோசனை. விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி, வெற்றிபடியில் கால் வையுங்கள். ஸ்ரீதனலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு நிறைந்திருக்கிறது. குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். மகர இராசி அன்பர்களே… 19.6.2014 அன்று குரு பகவான் உங்கள் இராசிக்கு சப்தம ஸ்தானமான 7-ம் இடத்திற்கு குடிபுக போகிறார். இதுவரையில் சப்தமே இல்லாமல் அடங்கி அமைதியாக இருந்த நீங்கள், சப்த நாடியும் புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியோடு இருக்கப்போகிறீர்கள். 7-ம் இடத்தில் உச்சமாக இருக்கும் குரு பகவான், உங்கள் இராசிக்கு 12-ம் இடம், 3-ம் இடம் ஆகியவற்றின் அதிபதி ஆவர். அதாவது விரயாதிபதி, கீர்த்தி ஸ்தானாதிபதி ஆவார். அவர் சப்தமத்தில் அமர்ந்து உங்கள் இராசிக்கு கீர்த்தி ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்வை செய்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஜென்ம இராசியையும் பார்வை செய்வதால், இந்த இடங்கள் எல்லாம் ரீசார்ஜ் ஆகிவிட்டது. இதுவரை இருட்டறையில் அடைப்பட்டிருந்த வண்டு, ஜன்னலை திறந்ததும் வெளியே பறந்தோடியது போல், பிரச்னைகள் எல்லாம் பஞ்சு போல் பறந்து விடும். உறவினர்களிடம் வாங்கிய கடன் சுமை தீரும். உறவினர் மனகசப்பு அகலும். திருமண வாய்ப்பு சிலருக்கு அமையும். பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பும், திருமணம் அமையவில்லையே என்று கவலைப்பட்ட பெற்றோர் மனதில் சுபச்செய்தி சங்கீதமாக இசைக்கும். வேலை வேலை என்று தேடி திரிந்து அலைந்து கொண்டு இருந்தவர்கள் நல்ல இடத்தில் வேலையில் அமர்வீர்கள். அலைச்சல் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். கடன் தொல்லை சற்று குறைந்துவிடும். பெற்றோர் உதவி சிலருக்கு கிட்டும். சிலருக்கு நண்பர்களிடத்தில் விரோதம் ஏற்படலாம், எல்லாம் பணத்தால்தான் என்று சப்தம குரு சொல்லுகிறார். ஜென்மத்தை குருபார்வை செய்வதால், முக்கியமான திட்டங்கள் நிறைவேறும். சரி. 7-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் சொல்லும் ஆலோசனை என்னவெனில், “திருமணமானவர்கள் கருத்து வேறுபாடு இல்லாமல் இருங்கள். நண்பர்களோடும் பகை வேண்டாம். படிக்காமல் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட வேண்டாம்“ என்கிறார். கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்குங்கள். அஷ்டலஷ்மிகளின் அருட்பார்வை பெறுவீர்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். கும்ப இராசி அன்பர்களே… 19.6.2014 அன்று குருபகவான் உங்கள் இராசிக்கு 6-ம் இடமான ரோக ஸ்தானத்திற்கு குடிபுக போகிறார். குரு உங்கள் இராசிக்கு தன, லாபாதிபதி. அதாவது, 2-ம் இடம், 11-ஆம் இடத்தின் அதிபதி ஆவர். 6-ஆம் இடத்தில் குரு அமரலாமா? என்று யோசித்து பயப்பட வேண்டாம். 6-ல் குரு அமர்ந்தாலும், அவர் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்தையும், 12-ம் இடத்தையும், 2-ம் இடத்தையும் பார்வை செய்கிறார். இதனால் இந்த இடங்கள் பலம் பெற்று யோகத்தை செய்யப்போகிறது. இதுவரை உங்கள் பேச்சை துச்சமாக மதித்தவர்கள் இனி உங்கள் வாக்கை வேத வாக்காக எடுத்து கொள்வர். தன, தான்யம் உங்களை நாடிவரும். பேச்சால் எதையும் சமாளித்து பிரச்னைகளை ஓவர் டேக் செய்துக்கொண்டு போய்விடுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாடு தொடர்பால் நல்ல ஆதாயம் உண்டு. தொழில்துறையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் பெறுவர். இதுவரை காசு இல்லையே என்று கை பிசைந்து கொண்டு இருந்த நீங்கள், கரன்சி எண்ணப்போகிறீர்கள். விரயங்கள் தவிர்க்கப்படும். தேவையற்ற செலவு குறையும். மருத்துவ செலவும் குறைந்து விடும். வீடு, மனை வாங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். கூட்டு தொழில் நல்ல லாபமாக நடக்கும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். உங்களை பார்த்து கேலி பேசியவர்கள் ஆச்சரியம் அடையும் விதமாக உங்கள் வாழ்க்கை நிலை மேலோங்கும். பொதுவாக குரு 6-ல் இருந்தாலும், கவலையே படவேண்டாம். காரணம், குருவின் பார்வைதான் பவராக வேலை செய்யும். முக்கியமாக சிலருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும். சரி. 6-ல் இருக்கும் குரு பகவான், என்ன ஆலோசனை சொல்கிறார்? என கேட்டால், “தேடி வரும் வீண் சண்டையை பெரிதுப்படுத்தாமல் விட்டு விடு. எதிரியே சோர்ந்து சமாதானமாக போய் விடுவான். வீண் வாக்குவாதம் வேண்டாம். உடல்நலனில் கவனம் தேவை. உணவு விஷயத்திலும் கவனம் தேவை.” என்பதே குருவின் ஆலோசனையாகும். ஆனைமுகனையும், தட்சிணாமூர்த்தியையும், குரு பகவானையும் வணங்கி வெற்றி நடைபோடுங்கள். ஸ்ரீவீரலஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக நிறைந்திருக்கிறது. குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள். மீன இராசி அன்பர்களே… 19.6.2014 உங்கள் இராசிக்கு பஞ்சமத்தில் அதாவது 5-ம் இடத்திற்கு வந்து குரு பகவான் அமர்க்களமாக அமர போகிறார். அடேங்கப்பா இனி தொட்டது எல்லாம் துலங்கும். திடீர் யோகங்கள் வந்து சேரும். வழி தெரியாமல் அடர்ந்த காட்டில் அல்லல்பட்டவர்களுக்கு ஒத்தையடி பாதை தென்படுவதுபோல, முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். இதுவரையில் தேவையில்லா மனக்குழப்பத்தை கொடுத்து வந்த குரு பகவான், உங்கள் இராசிக்கு 5-ஆம் வீட்டில் அமர்ந்ததும் இனி நீங்கள் யோகசாலிகள்தான். அதுமட்டுமல்ல, உடல்நிலையில் பலசாலியாகவும் திகழ்வீர்கள். ஆம். குரு பகவான், 5-ஆம் இடத்தில் அமர்ந்து, உங்கள் ஜென்ம இராசியை பார்க்கிறார். அத்துடன், 9-ஆம் இடத்தை, அதாவது பாக்கிய ஸ்தானத்தையும், 11-ம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். இனி என்ன கவலை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நோய்நொடியிலிருந்து விடுபடுவீர்கள். நல்ல உடல்நலம் பெறுவீர்கள். வாடகை வீட்டில் படாதபாடுபட்ட நீங்கள், இனி சொந்த வீட்டில் மனமகிழ்ச்சியோடும், குடும்பத்தில் தன, தான்யத்தோடும் வாழ்வீர்கள். நல்லவை அனைத்தும் கிடைக்கும். எப்படி சொல்கிறேன் என்றால், 5-ம் இடம் யோகமான இடம். கார், பங்களா என்று வசதியாக கூட வாழ வழி செய்வார் குருபகவான். பிள்ளைகளின் திருமணத்தை உடனே நடத்தி கொடுப்பார். எதிர்காலம் பற்றி கவலை இல்லை. இனி எல்லாம் நல்ல காலம்தான் என்கிற மனஉறுதியும், தெளிவும் உங்களுக்கு வந்து விடும். தெய்வ அனுகிரகத்தால் பல பிரச்னைகள் தீரும். கவலை எல்லாம் பறந்தோடும். உத்தியோகம், வியபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பொன், பொருள் நன்றாக சேரும். அச்சத்தை போக்குவார் உச்ச குரு. சரி 5-ம் வீட்டில் இருக்கும் குரு, இப்போது உங்களுக்கு சொல்ல விரும்பும் ஆலோசனை என்னவெனில், “குருவாகிய நான் உங்களுக்கு எல்லாம் கொடுக்கிறேன். நீங்கள் உங்கள் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். குழப்பத்தையும், சஞ்சலத்தையும் விடுங்கள். “முடியும்” என்ற எண்ணத்தில் இருங்கள். நீங்கள் முடிசூடா மன்னர்தான்” என்கிறார். விநாயகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி நம்பிக்கையோடு வெற்றிபடியில் கால் வையுங்கள். ஸ்ரீஅஷ்டலஷ்மிகளும் உங்களை தேடி வருவார்கள். வளங்களை வரங்களாக தருவார்கள். குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்!
Read More at: bhakthiplanet.com/2014/03/guru-peyarchi-predictions-2014-2015/ © BHAKTHIPLANET.COM
Read More at: bhakthiplanet.com/2014/03/guru-peyarchi-predictions-2014-2015/ © BHAKTHIPLANET.COM
செவ்வாய், 4 மார்ச், 2014
பளை நகரில் யாழ்தேவியை வரவேற்ற தமிழர் சேனை
கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய ரயில் சேவை, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் உத்தியோகபூர்வமாக இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங், பாராம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்டபட புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்திய அரசின் உதவியுடன் புகையிரதப் பாதையின் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய பணிகள் நிறைவடைந்து ஓமந்தையிலிருந்த கிளிநொச்சி நோக்கிய சேவை கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய சேவைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைய இன்று காலை கிளிநொச்சியில் இருந்து சேவைகள் ஆரம்பமாகின.
திங்கள், 3 மார்ச், 2014
தீர்வு கிடைக்குமா?
பருத்தித்துறையில் இருந்து கேவில் ( வடமராட்சி கிழக்கு ) வரையில் நடைபெறும் பஸ் சேவையில் தினமும் கஸ்ரங்களை இப் பிரதேச வாழ் மக்களும் வெளியிடத்து மக்களும் எதிர்கொண்டு வருகின்றார்கள். குறிப்பாக தனியார் சேவை வழங்குனர்கள் பாடசாலை நாட்களில் சீரான சேவையை வழங்கிவிட்டு சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சீரற்ற சேவையை வழங்குவது மிகவும் வேதனைக்குரிய விடயம். மேலும் இலங்கை போக்குவரத்து சபை வழங்கும் சேவை ஓரளவு பாராட்டத்தக்க வகையில் இருந்தாலும் திருப்தி தரும் வகையில் இல்லை . குறிப்பாக சேவை வழங்கும் வாகனங்கள் பயணிகளுக்கு ஏற்ற வகையில் தரமானதாக இல்லை . அடிக்கடி பழுதாகும் நிலையில் இருக்கும் வண்டிகளே சேவையில் ஈடுபடுகின்றன. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் இதர பயணிகளும் இடர்களை எதிர்கொள்கின்றார்கள் . நேற்றையதினம் ( 3/3/2014) கேவில் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட பேரூந்து குடத்தனை 6ம் கட்டை பகுதியில் வாகன சில்லு காற்று போனதால் பயணிகள் பொடிநடையாக செல்லவேண்டி ஏற்பட்டது. அதேபோல் இன்று காலை 7 மணிக்கு பருத்தித்துறையில் இருந்து கேவில் நோக்கி புறப்பட்ட பேரூந்து 7.30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் ஆலய அருகாமையில் காற்று போய் நின்றது .பெருமளவான ஆசிரியர்கள் இக்கட்டான நிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது. எந்தவொரு மாற்று ஏற்பாடுமில்லா நிலையால் பயணிகள் செய்வதறியா நிலைமை காணப்படுகின்றது .எனவே சம்மந்தப்பட்டவர்கள் விரைந்து செயற்பட்டு தீர்வை ஏற்படுத்தி முன்னேற்றினால் நன்று . ஆனால் அது எப்போது?
சனி, 1 மார்ச், 2014
இருப்பதைப் பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
சமகால அரசியல் அதிகாரப் பகிர்வை பயன்படுத்தி எமது மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாணவர் விடுதித் திறப்பு நிகழ்வில் இன்றைய தினம் (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டின் புகழ் பூத்த பாடசாலையின் நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடையும் அதேவேளை, இவ்விடுதி வசதியை ஏற்படுத்தித் தந்த கல்லூரியின் பழைய மாணவர் இயன் கிருபாகரன் அவர்களுக்கும், அவர்தம் பாரியாருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்விடுதியின் முழுமையான தேவைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரிடமும், வடமாகாண ஆளுநரிடமும் திரு. கிருபாகரன் கோரிக்கை விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள், கோரிக்கைகள் தொடர்பில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என்று தெரிவித்ததுடன், இது விடயத்தில் தாம் கூடிய கவனம் எடுப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் வடமாகாணத்திற்கே அதிகளவான நிதி அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தவகையில் மாகாண கல்வி அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் மேற்படி கோரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், இன்றிருக்கும் இச்சூழலைப் புறந்தள்ளிவிட்டு, இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டு நடைமுறைச்சாத்தியமான வழியில் தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக, அதிகாரப் பகிர்வு எம்மிடம் இருக்கிறது. எனவே, சமகாலத்தில் எமக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டே நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் யோகேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும், விடுதியை நிர்மாணித்தவருமான கரன் என்று அழைக்கப்படும் இயன் கரன், ஜேர்மன் நாட்டின் தூதுவர் டொக்டர் ஜோகன் மோர்ஹார்ட், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
முன்பதாக, அதிதிகள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து மாணவர் விடுதியினை திரு. திருமதி இயன் கரன் தம்பதிகள் திறந்து வைத்தனர்.
இக்கல்லூரியில் முன்னர் இருந்து வந்த மாணவர் விடுதி நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்ததன் பின்னர், பழைய மாணவரான இயன் கரன், புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசித்து வரும் நிலையில், 06 கோடி ரூபா செலவில் மாணவர் விடுதிக்கென இரண்டு கட்டிடத் தொகுதிகளை அமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
































