8/5/2014 மாலை 6.45 மணியளவில் திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றால் குடத்தனை பகுதியில் அமைந்திருக்கும் மருதங்கேணி பிரதேச செயலக உப பணிமனை சேதமுற்றது.. ஆட்பதிவு பிரிவு பகுதியில் இருந்த கணனிகள் மற்றும் ஆவணங்கள் மழையால் நனைந்தும் சேதமுற்றுள்ளது. எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.ஆட்பதிவு பிரிவு பகுதி கூரைகள் காற்றால் சுமார் 70 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டது. பெரும்பாலான பிரிவுகள் நிரந்தரமாக மருதங்கேணி பகுதியில் அமைந்திருக்கும் தலைமை செயலகத்துக்கு இடம் மாற்றும் செயற்பாடுகள் நடைபெறுவதை நேரடியாக அவதானிக்க கூடியதாகவுள்ளது





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக