மருதங்கேணி பிரதேசமானது கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் போன்றவற்றினால் மக்களுடைய பொருளாதாரத்திலும் அடிப்படை வசதிகள், கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்றும் பின்தள்ளப்பட்டவையாக இருந்து விடமுடியாது மக்களின் பௌதீக தேவைகள் உட்பட வாழ்வாதார தொழில்கள், கல்வி மற்றும் துறைசார் செயற்பாடுகள் அனைத்தையும் கட்டியெழுப்ப வேண்டியவர்களாக நாம் உள்ளோம் என ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்கள் தெரிவித்தார்.
மருதங்கேணி பிரதேச இளைஞர் கழக சம்மேளன வருடாந்த இளைஞர் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
நாம் கடந்து வந்த பாதைகள் வலிகளும் சுமைகளையும் தாங்கியவையாக இருந்தாலும் தற்கால சிறார்களை கல்வியறிவிலும் துறைசார் ரீதியான செயற்பாடுகளிலும் வளர்த்தெடுப்பதன் ஊடாக எதிர்காலத்தில் பிள்ளைகளின் வாழ்க்கை நிலை ஒளிமயமாக மாற்றமடையும். அத்துடன் இளைஞர் சக்தி ஓர் நாட்டின் இன்றியமையாததாக அமைகிறது எனவே அவர்களின் உழைப்புக்களை யாரும் தமது நலன்களுக்காக சுரண்டி விட இடமளிக்காத வகையில் எமது பிரதேசங்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கும் எதிர்காலச்சந்ததிக்கு முன்னுதாரணமாகவும் இளைஞர் சக்தியானது செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டதுடன் இவ்வாறான இளைஞர் கழகங்கள் மற்றும் இளைஞர் கழக சம்மேளனங்களின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு என்றும் எமது உறவுக்கரம் கொடுப்போம் எனத்தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவருமான சிறிரங்கேஸ்வரன், பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் பூ.சஞ்ஜீவன், வலிகாமம் தெற்கு பிரதேசசபை எதிர்கட்சித்தலைவர் இ.அரிகரன் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் ஐ.தபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக