புதன், 14 டிசம்பர், 2011
புதன், 30 நவம்பர், 2011
இலங்கையின் முதல் தமிழ் கத்தோலிக் செய்தி இணையத்தளம் யாழ் நகரில் அறிமுகம்
இலங்கையில் முதன் முதலாக கத்தோலிக்க செய்திகளைப் பார்வையிடுவதற்காக இணையத்தளமொன்று யாழ்நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் கத்தோலிக் செய்தி லங்கா இணையத்தள என்ற அவ்விணையத்தளத்தின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை (26.11.2011) அன்று பிசப் சவுந்தரம் மீடியா சென்ரரால் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருள்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விணையத்தளம் இலங்கையின் எல்லா மறை மாவட்டங்களின் தமிழ் கத்தோலிக்க செய்திகளை அறிக்கையிடுவதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
இவ்விணையத்தளத்தை tcnlnet.com எனும் முகவரியில் பார்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்
இவ்விணையத்தளம் இலங்கையின் எல்லா மறை மாவட்டங்களின் தமிழ் கத்தோலிக்க செய்திகளை அறிக்கையிடுவதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
இவ்விணையத்தளத்தை tcnlnet.com எனும் முகவரியில் பார்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்
புதன், 23 நவம்பர், 2011
ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு
சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்.
பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச்சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இதற்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட கணக்கை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்.
பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும். அந்த விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.
அந்த விண்டோவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்.
உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச்சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச்சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச்சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு விண்டோ வரும்.
இப்பொழுது புதிய கடவுச்சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை எப்பொழுது போல உபயோகிக்கலாம்.
பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச்சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இதற்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட கணக்கை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்.
பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும். அந்த விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.
அந்த விண்டோவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்.
உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச்சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச்சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச்சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு விண்டோ வரும்.
இப்பொழுது புதிய கடவுச்சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை எப்பொழுது போல உபயோகிக்கலாம்.
செவ்வாய், 1 நவம்பர், 2011
சில்லுகள் இல்லாமல் விமானத்தை தரையிறக்கிய விமானி!
இன்று விமான விபத்து ஒன்றில் 220 பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர். 767 போயிங் ரக விமானமே தரையிறங்கும் போது சில்லுகள் வெளியே வராத காரணத்தால் விபத்து நேரிட்டது. விமானியின் சாதுரியமான செயற்பாட்டால் ஏராளமான பயணிகள் உயிர் தப்பினர்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள Newark விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமே மேற்படி விபத்துக்கு உள்ளானது. ஆனால் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொழிநுட்ப கோளாறு தான் காரணம் என்று விமானிகள் அறிவித்துள்ளனர்.
சனி, 29 அக்டோபர், 2011
யு.எஸ்.பி ட்ரைவின் மூலம் கணணியைப் பாதுகாப்பதற்கு
உங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கணணிக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர்(Predator) என்ற புரோகிராம் தருகிறது.
நீங்கள் கணணியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில் வெளியே சென்றாலும் பிரிடேட்டர் உங்கள் கணணியைப் பாதுகாக்கிறது.
இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.
பிரிடேட்டர் புரோகிராமினை விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு அல்லது நீங்கள் விரும்பும் போது அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின் தொடர்ந்து நீங்கள் கணணியில் பணியை மேற்கொள்ளலாம்.
சற்று வெளியே செல்ல வேண்டும் என்றால் கணணியிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன் உங்கள் மொனிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.
நீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து பணியைத் தொடரலாம். மொனிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும்.
இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி மீண்டும் கணணியை உயிர்ப்பித்து கடவுச்சொல்லை தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால் கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.
அனுமதி பெறாதவர் கணணியை இயக்க முற்படுகையில் பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.
இந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் கணக்கிலும் காட்டும். இதனால் இன்னொரு கணணியிலிருந்து இந்த கணக்கைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால் ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் ஒருவர் கொப்பி செய்தாலும் அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.
பிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.
ப்ளாஷ் தொலைந்து போனால் கெட்டுப் போனால் என்ன செய்வது? என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை நிறுவும் போது கடவுச்சொல் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கணணியின் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.
தவறான கடவுச்சொல் கொடுத்தால் கணணியில் இருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கணணியைப் பாதுகாக்கலாம்.
செவ்வாய், 11 அக்டோபர், 2011
இன்று வானில் குட்டி நிலா தெரியும்: நிபுணர் தகவல்
வழக்கத்தை விட 12 சதவீத அளவு குறைந்த மற்றும் ஒளி மங்கிய நிலவு இன்று வானில் தெரிய உள்ளது. டெல்லியில் உள்ள ஸ்பேஸ் அமைப்பின் இயக்குனர் தேவ்கன் இது குறித்து கூறியதாவது: சந்திரன், பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.
பூமியிலிருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 577 கி.மீ தூரத்தில் உள்ள போது சந்திரன் பிரகாசமாகவும், அளவில் பெரியதாகவும் காட்சியளிக்கும்.
பூமியிலிருந்து வெகு தொலைவுக்கு அதாவது 4 லட்சத்து 6 ஆயிரத்து 434 கி.மீ தூரத்துக்கு செல்லும் போது அளவில் சிறியதாகவும், ஒளி மங்கியதாகவும் காட்சியளிக்கும்.
கடந்த மார்ச் மாதம் பூமிக்கு அருகே வந்த போது 30 சதவீதம் அதிக ஒளியுடன் நிலவு காட்சியளித்தது.
தற்போது பூமியிலிருந்து வெகு தொலைவுக்கு சென்றுள்ளதால் இன்று 12.5 சதவீதம் அளவு குறைந்து, ஒளியும் குறைந்து காட்சியளிக்கும். இது ஒரு அபூர்வ வானியல் நிகழ்வாகும் என்றார்.
பூமியிலிருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 577 கி.மீ தூரத்தில் உள்ள போது சந்திரன் பிரகாசமாகவும், அளவில் பெரியதாகவும் காட்சியளிக்கும்.
பூமியிலிருந்து வெகு தொலைவுக்கு அதாவது 4 லட்சத்து 6 ஆயிரத்து 434 கி.மீ தூரத்துக்கு செல்லும் போது அளவில் சிறியதாகவும், ஒளி மங்கியதாகவும் காட்சியளிக்கும்.
கடந்த மார்ச் மாதம் பூமிக்கு அருகே வந்த போது 30 சதவீதம் அதிக ஒளியுடன் நிலவு காட்சியளித்தது.
தற்போது பூமியிலிருந்து வெகு தொலைவுக்கு சென்றுள்ளதால் இன்று 12.5 சதவீதம் அளவு குறைந்து, ஒளியும் குறைந்து காட்சியளிக்கும். இது ஒரு அபூர்வ வானியல் நிகழ்வாகும் என்றார்.
புதன், 5 அக்டோபர், 2011
பேஸ்புக்கின் பிரபலமான விளையாட்டை கூகுள் பிளசில் விளையாடுவதற்கு
பேஸ்புக் இந்த இமாலய வெற்றியை பெற முக்கிய காரணங்களில் பேஸ்புக்கின் விளையாட்டு பகுதியும் ஒன்று.
பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக ஒவ்வொன்றையும் செய்து வரும் கூகுள் பிளஸ் தற்பொழுது கவனத்தை பேஸ்புக் Games மீது வைத்துள்ளது.
அதன்படி பேஸ்புக்கின் சிறந்த விளையாட்டான CityVille விளையாட்டு தற்பொழுது கூகுள் பிளசிலும் வந்து விட்டது. இனி இந்த விளையாட்டை கூகுள் பிளஸ் வாசகர்களும் விளையாடி மகிழலாம்.
முதலில் இந்த Google Plus Games லிங்கை கிளிக் செய்து கூகுள் பிளஸ் விளையாட்டு பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
அதில் CityVille game ஐகான் மீது கிளிக் செய்தால் ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் Allow Access என்ற பட்டனை அழுத்தவும்.
நீங்கள் அனுமதி அளித்தவுடன் அந்த விளையாட்டு ஓபன் ஆகும். இனி அந்த Game நீங்களும் விளையாடி மகிழுங்கள். உங்களுக்கான ஒரு நகரத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.
இதே முறையில் கூகுள் பிளசில் உள்ள அனைத்து விளையாட்டுக்களையும் ஆக்டிவேட் செய்து விளையாடி கொள்ளலாம்.
பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக ஒவ்வொன்றையும் செய்து வரும் கூகுள் பிளஸ் தற்பொழுது கவனத்தை பேஸ்புக் Games மீது வைத்துள்ளது.
அதன்படி பேஸ்புக்கின் சிறந்த விளையாட்டான CityVille விளையாட்டு தற்பொழுது கூகுள் பிளசிலும் வந்து விட்டது. இனி இந்த விளையாட்டை கூகுள் பிளஸ் வாசகர்களும் விளையாடி மகிழலாம்.
முதலில் இந்த Google Plus Games லிங்கை கிளிக் செய்து கூகுள் பிளஸ் விளையாட்டு பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
அதில் CityVille game ஐகான் மீது கிளிக் செய்தால் ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் Allow Access என்ற பட்டனை அழுத்தவும்.
நீங்கள் அனுமதி அளித்தவுடன் அந்த விளையாட்டு ஓபன் ஆகும். இனி அந்த Game நீங்களும் விளையாடி மகிழுங்கள். உங்களுக்கான ஒரு நகரத்தை உருவாக்கி கொள்ளுங்கள்.
இதே முறையில் கூகுள் பிளசில் உள்ள அனைத்து விளையாட்டுக்களையும் ஆக்டிவேட் செய்து விளையாடி கொள்ளலாம்.
சனி, 24 செப்டம்பர், 2011
facebook இவ்வாரம் வெளியிட்ட 5 முக்கியமான புதிய மாற்றங்கள்!
Facebook ஸ்தாபகர் Mark Zukerberg கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்த facebook இன் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான புதிய மாற்றங்களை ஒரே பார்வையில் இங்கு தருகிறோம்.
1 – Timeline – இது உங்களைப்பற்றிய ஒரு தகவல் ஓடையாகும். இது புகைப்படங்கள் மற்றும் ஏனைய பதிவுகள் அனைத்தையும் கொண்டிருக்கும். இல் இணைந்ததிலிருந்து ஒவ்வொரு வருடமாக உங்களின் வாழ்க்கையை நீங்கள் பார்க்கலாம்.
2 – Facebook Gestures – இது நீங்கள் செய்யும் அனைத்து விடயங்களையும் உங்கள் நண்பர்களுக்கு இலகுவாக வெளிப்படுத்தும் வசதியாகும். இதன்மூலம் அதிகளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.
3 - உங்களைப்பற்றிய தகவல்களை பயன்பாட்டாளர்கள் உங்கள் கணக்கில் பகிர்ந்துகொள்வதற்கு ஒரே தடவையில் அனுமதியைப்பெறும் முறை. இதன்மூலம் ஒவ்வொருமுறையும் அனுமதிபெறத்தேவையில்லை. இதனால் உங்கள் செய்தியோடை நிரம்பிவிடுமென அஞ்சத்தேவையில்லை.
4 – உங்களினதும் உங்களின் நண்பர்களினதும் முக்கியத்துவம் குறைந்த நடவடிக்கைகள் Ticker எனப்படும் பகுதிக்கு தானாகவே மாற்றப்படும்.
5 - facebook இலிருந்தவாறே பாடல்கள் திரைப்படங்கள் மற்றும் செய்திகளை பார்த்தும் கேட்டும் அனுபவிக்க முடியும். உங்கள் நண்பர்கள் பார்வையிடும் திரைப்படங்கள் முதலானவற்றை facebook இன் Ticker உங்களுக்கு அறிவிக்கும். நண்பர்களுடன் இணைந்து பாடல் கேட்கலாம்.
facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு 800 மில்லியனை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 500 மில்லியன் பேர் facebook ஐ பார்வையிட்ட சாதனையும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
1 – Timeline – இது உங்களைப்பற்றிய ஒரு தகவல் ஓடையாகும். இது புகைப்படங்கள் மற்றும் ஏனைய பதிவுகள் அனைத்தையும் கொண்டிருக்கும். இல் இணைந்ததிலிருந்து ஒவ்வொரு வருடமாக உங்களின் வாழ்க்கையை நீங்கள் பார்க்கலாம்.
2 – Facebook Gestures – இது நீங்கள் செய்யும் அனைத்து விடயங்களையும் உங்கள் நண்பர்களுக்கு இலகுவாக வெளிப்படுத்தும் வசதியாகும். இதன்மூலம் அதிகளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.
3 - உங்களைப்பற்றிய தகவல்களை பயன்பாட்டாளர்கள் உங்கள் கணக்கில் பகிர்ந்துகொள்வதற்கு ஒரே தடவையில் அனுமதியைப்பெறும் முறை. இதன்மூலம் ஒவ்வொருமுறையும் அனுமதிபெறத்தேவையில்லை. இதனால் உங்கள் செய்தியோடை நிரம்பிவிடுமென அஞ்சத்தேவையில்லை.
4 – உங்களினதும் உங்களின் நண்பர்களினதும் முக்கியத்துவம் குறைந்த நடவடிக்கைகள் Ticker எனப்படும் பகுதிக்கு தானாகவே மாற்றப்படும்.
5 - facebook இலிருந்தவாறே பாடல்கள் திரைப்படங்கள் மற்றும் செய்திகளை பார்த்தும் கேட்டும் அனுபவிக்க முடியும். உங்கள் நண்பர்கள் பார்வையிடும் திரைப்படங்கள் முதலானவற்றை facebook இன் Ticker உங்களுக்கு அறிவிக்கும். நண்பர்களுடன் இணைந்து பாடல் கேட்கலாம்.
facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு 800 மில்லியனை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 500 மில்லியன் பேர் facebook ஐ பார்வையிட்ட சாதனையும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
செவ்வாய், 20 செப்டம்பர், 2011
செந்தமிழ் வி.க. ஆதரவுடன் வடமராட்சி கிழக்கில் மாபெரும் விளையாட்டு நிகழ்வு.
வடமராட்சிகிழக்கு பகுதியில் செந்தமிழ் விளையாட்டுகழகத்தினர் நடாத்தும் மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.இன்றையதினம் வெற்றிலைக்கேணி றம்போ விளையாட்டு கழகமும்,வத்திராயன் உதயசூரியன் விளையாட்டு கழகமும் மோதின.இறுதியில் ஒரு கோல் வித்தியாசத்தில் உதயசூரியன் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.இந்த நிகழ்வு இன்று மாலை ஐந்து மணிக்கு உடுத்துறை செந்தமிழ் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
வியாழன், 15 செப்டம்பர், 2011
அரசு, கூட்டமைப்பு பேச்சு வார்த்தை இன்று: காற்றில் பறந்த கூட்டமைப்பின் கோரிக்கைகள்!!
அரசாங்க பிரதிநிதிகளுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை மீண்டும் இன்று இடம்பெறவுள்ளது.
பேசப்பட்ட விடயங்கள் மற்றும் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக எழுத்து மூலம் பதில் வழங்கினால் மட்டுமே தாம் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைகளுக்கான அடுத்த திகதி நிர்ணயிக்கப்படாது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன், அரசுத்தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து இரு தரப்பும் நாளை சந்தித்து பேச உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. இன்றைய சந்திப்பில் அரசாங்க தரப்பிற்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தலைமை தாங்குகிறார்.
ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழுவில் எம்.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்வார்கள். கடந்த ஜனவரிக்கு பின்னர் 9 தடவைகள் இருதரப்பும் சந்தித்து பேசிய போதிலும் அரசாங்க தரப்பு இணங்கிய எந்த விடமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.பேசப்பட்ட விடயங்கள் மற்றும் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக எழுத்து மூலம் பதில் வழங்கினால் மட்டுமே தாம் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைகளுக்கான அடுத்த திகதி நிர்ணயிக்கப்படாது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் ஆர்.சம்பந்தன், அரசுத்தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து இரு தரப்பும் நாளை சந்தித்து பேச உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-நன்றி தமிழ் சி.என்.என்.இணையம்-
இனி இப்படித்தான் பாடம் சொல்லித்தருவார்கள்(பட இணைப்பு)
ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்பகாலங்களில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இணையம்,
சமூக வலையமைப்புகள் என உலகம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படிப்பார்கள் என்பதை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டதையே இங்கு காண்கிறீர்கள்.
திங்கள், 12 செப்டம்பர், 2011
கூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு
நாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஓன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும்.
அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? முடியும். invisible ஆனால் online இல் இருந்தால் அவர்களை எளிமையாக கண்டறியலாம். அதற்கு நீங்கள் GTALK ஐ install செய்திருக்க வேண்டும்.
இதனை நிறுவிய பின் GTALKஇல் INVISIBLEஇல் இருப்பவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக xxx@gmail.com என்ற மெயில் ஐடியை வைத்துக் கொள்வோம். அந்த ஐடியில் கிளிக் செய்து தனி windowஆக ஓபன் செய்த பின்னர் அங்கு வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்த பின்னர் go off the record என்பதையும் கிளிக் செய்யவும்.
இப்போது சாட் பாக்சில் xxx is offline. You can still send this person messages and they will receive them the next time they are online என காட்டும். இதை பார்த்தால் அந்த ஐடி offline இல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் onlineஇல் invisible ஆக இருக்கிறாரா என்பதை அறிய ஒரு hai good morning என என்டர் செய்து பார்க்கலாம். கீழே xxx@gmail.com is offline and can't receive messages right now என்ற செய்தி வந்தால் அந்த ஐடி உண்மையிலே offlineஇல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்டதை போன்ற செய்தி வரவில்லை என்றால் அவர் onlineஇல் ஆனால் invisibleஇல் இருக்கிறார். எனவே அந்த செய்தி காட்டவில்லை. அப்புறமென்ன உங்கள் சாட்-க்கு பதில் வந்தால் உங்கள் சாட்டை தொடரலாம்.
இணையதள முகவரி
அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா? முடியும். invisible ஆனால் online இல் இருந்தால் அவர்களை எளிமையாக கண்டறியலாம். அதற்கு நீங்கள் GTALK ஐ install செய்திருக்க வேண்டும்.
இதனை நிறுவிய பின் GTALKஇல் INVISIBLEஇல் இருப்பவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக xxx@gmail.com என்ற மெயில் ஐடியை வைத்துக் கொள்வோம். அந்த ஐடியில் கிளிக் செய்து தனி windowஆக ஓபன் செய்த பின்னர் அங்கு வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்த பின்னர் go off the record என்பதையும் கிளிக் செய்யவும்.
இப்போது சாட் பாக்சில் xxx is offline. You can still send this person messages and they will receive them the next time they are online என காட்டும். இதை பார்த்தால் அந்த ஐடி offline இல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் onlineஇல் invisible ஆக இருக்கிறாரா என்பதை அறிய ஒரு hai good morning என என்டர் செய்து பார்க்கலாம். கீழே xxx@gmail.com is offline and can't receive messages right now என்ற செய்தி வந்தால் அந்த ஐடி உண்மையிலே offlineஇல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்டதை போன்ற செய்தி வரவில்லை என்றால் அவர் onlineஇல் ஆனால் invisibleஇல் இருக்கிறார். எனவே அந்த செய்தி காட்டவில்லை. அப்புறமென்ன உங்கள் சாட்-க்கு பதில் வந்தால் உங்கள் சாட்டை தொடரலாம்.
இணையதள முகவரி
பேஸ்புக்கில் +music வசதியை பெறுவதற்கு
முக பக்கத்தில் தற்போது youtube வீடியோ மற்றும் mp3, Radio இசையினை நேரடியாக பகிரவும், கேட்கவும் +music வசதியளிக்கிறது.
இந்த வசதியினை பெற + music இணை உங்கள் கூகுள் குரோம் உலாவியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் கூகுள் குரோம் உலாவியின் வலது பக்க மேல் மூலையில் ஒரு ஐகான் தோன்றும்.
அதனை கிளிக் செய்து நீங்கள் பாடல்களை தேடி உங்கள் உலாவியில் கேட்க முடியும், இப்போது உங்கள் முகப்பக்கத்தினை கூகுள் குரோம் உலாவியில் திறந்தால் உங்கள் முகப்பக்கத்தில் +music சேர்த்துள்ளதை காணலாம்.
அதனை கிளிக் செய்தால் இசையினை தேடுவதற்கான பாக்ஸ் தோன்றும். அதிலே YOUTUBE மற்றும் MP3, RADIO இசையினை தேடி பெறலாம். இப்போது ADD என்பதை கிளிக் செய்வதன் மூலம் YOUTUBE வீடியோக்களை நேரடியாக பகிரவும் முடியும்.
இந்த வசதியினை பெற + music இணை உங்கள் கூகுள் குரோம் உலாவியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் கூகுள் குரோம் உலாவியின் வலது பக்க மேல் மூலையில் ஒரு ஐகான் தோன்றும்.
அதனை கிளிக் செய்து நீங்கள் பாடல்களை தேடி உங்கள் உலாவியில் கேட்க முடியும், இப்போது உங்கள் முகப்பக்கத்தினை கூகுள் குரோம் உலாவியில் திறந்தால் உங்கள் முகப்பக்கத்தில் +music சேர்த்துள்ளதை காணலாம்.
அதனை கிளிக் செய்தால் இசையினை தேடுவதற்கான பாக்ஸ் தோன்றும். அதிலே YOUTUBE மற்றும் MP3, RADIO இசையினை தேடி பெறலாம். இப்போது ADD என்பதை கிளிக் செய்வதன் மூலம் YOUTUBE வீடியோக்களை நேரடியாக பகிரவும் முடியும்.
சனி, 10 செப்டம்பர், 2011
KingSoft Office Suite 2012: மைக்ரோசாப்ட் ஆபிசுக்கு மாற்றாக ஒரு மென்பொருள்
நாம் எப்பொழுதும் வேர்ட் எக்ஸல் போன்றவற்றிற்கு நாடுவது மைக்ரோசாப்டைதான். ஏன் என்றால் அது மிகவும் சுலபமாக இருக்கும் கையாள்வதற்கு என்பதாலேயே அதை உபயோகிக்கிறோம்.
இத்தனைக்கும் அந்த மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம்.
இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளிவந்திருக்கிறது. அதன் பெயர் கிங்க்சாப்ட் KingSoft Office Suite 2012 இது ஒரு இலவச மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் போன்றவைகளை உருவாக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும். நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும். மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.
இந்த மென்பொருளின் அளவு வெறும் 70 எம்பி மட்டுமே.
தரவிறக்க சுட்டி http://www.kingsoftstore.com/download/office_suite_free_2012.exe
இத்தனைக்கும் அந்த மென்பொருள் இலவசமில்லை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். இதற்கு பதில் இலவசமாக கிடைக்கும் ஒபன் ஆபிஸ் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தலாம்.
இப்பொழுது ஒரு ஆபிஸ் வெளிவந்திருக்கிறது. அதன் பெயர் கிங்க்சாப்ட் KingSoft Office Suite 2012 இது ஒரு இலவச மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் போன்றவைகளை உருவாக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட் எக்ஸல் பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும். நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கோப்புகளையும் எடிட் செய்ய முடியும். மென்பொருளுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் சுலபமாக அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.
இந்த மென்பொருளின் அளவு வெறும் 70 எம்பி மட்டுமே.
தரவிறக்க சுட்டி http://www.kingsoftstore.com/download/office_suite_free_2012.exe
புதன், 7 செப்டம்பர், 2011
வடமராட்சிகிழக்கில்...07/09/2011
நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய கட்டுமானத்தில் இந்திய சிற்பிகள்..
நாகர்கோவில் கண்ணகை அம்மன்.
உணவத்தை கண்ணகை அம்பாள் ஆலய வளாகம் வெற்றிலைக்கேணி....
திங்கள், 5 செப்டம்பர், 2011
ISO கோப்புகளை உருவாக்குவதற்கு...!
விண்டோஸ் இமேஜ் கோப்பு போர்மட்டில் குறிப்பிடத்தக்கது ISO போர்மட் ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ISO போர்மட்டில் மட்டுமே இருக்கும்.
இவ்வாறு உள்ள ISO கோப்புகளை பூட்டபிள் கோப்பாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும்.
இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண கோப்புகளை ISO பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு, ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
ஒப்பன் ஆகும் விண்டோவில் DVD to ISO மற்றும் ISO to DVD இரண்டில் விருப்பமான தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட கோப்பை தேர்வு செய்யவும். அடுத்து Run என்னும் பொத்தானை அழுத்தவும்.
குறிப்பிட்ட சில மணி நேரங்களில் கோப்பானது மாற்றம் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருள் சீடி, டிவீடி மற்றும் புளுரேடிஸ்க் போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும். இந்த இயங்குதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். ISO கோப்புகளை உருவாக்க இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.
இணையதள முகவரி : BDlot DVD ISO
இவ்வாறு உள்ள ISO கோப்புகளை பூட்டபிள் கோப்பாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும்.
இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண கோப்புகளை ISO பைலாக மாற்றம் செய்வதற்கு இணையத்தில் இருக்கும் மென்பொருள்கள் குறைவு, ஆனால் இந்த இரண்டு பயன்பாடுகளையும் செய்வதற்கு ஒரே மென்பொருள் உதவி செய்கிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
ஒப்பன் ஆகும் விண்டோவில் DVD to ISO மற்றும் ISO to DVD இரண்டில் விருப்பமான தேர்வினை தேர்வு செய்யவும். தேர்வு செய்து கொண்டு, பின் குறிப்பிட்ட கோப்பை தேர்வு செய்யவும். அடுத்து Run என்னும் பொத்தானை அழுத்தவும்.
குறிப்பிட்ட சில மணி நேரங்களில் கோப்பானது மாற்றம் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருள் சீடி, டிவீடி மற்றும் புளுரேடிஸ்க் போன்றவற்றை ஆதரிக்க கூடியது ஆகும். இந்த இயங்குதளத்தை விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, ஏழு ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். ISO கோப்புகளை உருவாக்க இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.
இணையதள முகவரி : BDlot DVD ISO
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011
யாழ்.பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை தமிழில் பதிய வாய்ப்பு!
யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளைத் தாமே தமிழில் பதிவு செய்து கொள்ளக்கூடிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தளுவத்த நேற்றிரவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொலிஸ் நிலையங்களில் காணப்படும் மொழிக்குறைபாட்டை நீக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைத் தமிழில் எழுதிக் கொடுக்கத்தக்கதான படிவங்களை பொலிஸ் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைச் செய்வதற்கு சிங்களம் தெரிந்த தரகர்களைப் பொலிஸ் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலமை காணப்பட்டது.
தற்போது பொதுமக்கள் தமது பிரச்சினைகளைத் தமிழ் மொழியில் தாமே எழுதிக் கொடுத்து தீர்வு காணமுடியும். இடைத்தரகர்கள் இன்மையால் லஞ்சம் போன்ற குற்றச் செயல்கள் தவிர்க்கப்படுவதுடன் பொதுமக்கள் நல்ல சேவையையும் பெற்றுக் கொள்ள வழி ஏற்பட்டும். மக்கள் இதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தளுவத்த நேற்றிரவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொலிஸ் நிலையங்களில் காணப்படும் மொழிக்குறைபாட்டை நீக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைத் தமிழில் எழுதிக் கொடுக்கத்தக்கதான படிவங்களை பொலிஸ் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைச் செய்வதற்கு சிங்களம் தெரிந்த தரகர்களைப் பொலிஸ் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலமை காணப்பட்டது.
தற்போது பொதுமக்கள் தமது பிரச்சினைகளைத் தமிழ் மொழியில் தாமே எழுதிக் கொடுத்து தீர்வு காணமுடியும். இடைத்தரகர்கள் இன்மையால் லஞ்சம் போன்ற குற்றச் செயல்கள் தவிர்க்கப்படுவதுடன் பொதுமக்கள் நல்ல சேவையையும் பெற்றுக் கொள்ள வழி ஏற்பட்டும். மக்கள் இதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு!
நண்பர்களே, நேற்று மதுரையில் வேலாயுதம் பாடல் வெளியிட்டு விழா ரசிகர்களுக்கு மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. பாடல்களை வெளியிட்டு விழாவின் இறுதி பகுதியாக விஜய் பேசினார். அவர் பேசியது இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் ரெகார்ட் செய்யப்பட்டதால் தரம் சற்று குறைவாக உள்ளது. அவர் பேச்சின் இறுதியில் வேலாயுதம் படத்தில் வரும் "சொன்னா புரியாது" என்ற பாடலை ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடினார்.
தமிழக குழந்தைகளுக்கு விஜய், "நேரு" மாமாவாக இருக்காராம். தமிழகத்தை காக்க வந்த "காந்தி"யாம். அதாவது பரவாயிலைங்கோ, ஒருத்தரு பேசினாரு பாருங்க, தென்னகத்தின் "அன்னா ஹசாரே"ன்னு, எனக்கு மயக்கமே வந்திருச்சு. பேசுங்க புகழ் பாடி பேசுங்க, அதுக்காக இம்புட்டு ஓவரா பேசக்கூடாது.
அமெரிக்காவில் 'ஐரேன்' சூறாவளி: இலங்கையருக்கு பாதிப்பு இல்லை
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள ‘ஐரேன்’ சூறாவளி அபாயத்தினால் இலங்கையருக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சுமார் 20 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
அத்திலாந்திக் சமுத்திரத்தில் தோன்றிய ‘ஐரேன்’ என்ற சூறாவளி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தை நேற்று சனிக்கிழமை தாக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 960 கிலோமீற்றர் விட்டம் கொண்ட இந்த ‘ஐரேன்’ சூறாவளி மணித்தியாலத்திற்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் நகருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவின் கிழக்கு பிரதேச நகரங்களுக்கு பாரிய சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கிழக்கு கரையோர மாநிலங்கள் பலவற்றில் ஆபத்தான பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 8 இலட்சம் மக்கள் வசிக்கும் நியூயோர்க் நகரில் 3 இலட்சத்து 70 ஆயிரம் பேரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் கடந்த இரு தசாப்தங்களில் முதல் தடவையாக சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க், நியூஜேர்ஸி, வேர்ஜினியா, மேரிலண்ட், வடகரோலினா கனெக்டிகட், டெலாவர் ஆகிய 7 மாநிலங்களிலும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க்கின் பிரதான 5 விமான நிலையங்களும் இன்று பகல் முதல் மூடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை சுமார் 7000 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம், தகவல்களை அறிந்து கொள்வதற்காக 0012023520355 என்ற தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
சனி, 27 ஆகஸ்ட், 2011
வானூர்தி பூ மழை பொழிய, பக்தர்கள் வடம் பிடிக்க, தேரேறித் திருவீதியுலா வந்தான் திருமுருகன்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 04.08.2011 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இன்றைய தினம் தேர்த் திருவிழா இடம்பெற்றது.
இத் தேர்த் திருவிழாவில் இலட்சக் கணக்கான பக்தர்கள் புடைசூழ, வானத்தில் இருந்து வானூர்தி பூ மழை பொழிய திருவீதியில் தேரேறிக் காட்சி தந்தான் நல்லூர்க் கந்தன்.
பறவக்காவடி, அங்கப்பிரதிஸ்டை, அடியழித்தல் என அடியார்கள் தமது நேர்த்திக் கடன்களைத் தேரடியில் நிறைவேற்ற, தேர் மீது அமர்ந்து ஆறுமுகக் கந்தன் அருள்பாலித்தான்.
அத்துடன் நல்லூர்க் கந்தனின் இவ் வருட மஹோற்சவத்தின் இறுதி நாளான நாளை தீர்த் தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத் தேர்த் திருவிழாவில் இலட்சக் கணக்கான பக்தர்கள் புடைசூழ, வானத்தில் இருந்து வானூர்தி பூ மழை பொழிய திருவீதியில் தேரேறிக் காட்சி தந்தான் நல்லூர்க் கந்தன்.
பறவக்காவடி, அங்கப்பிரதிஸ்டை, அடியழித்தல் என அடியார்கள் தமது நேர்த்திக் கடன்களைத் தேரடியில் நிறைவேற்ற, தேர் மீது அமர்ந்து ஆறுமுகக் கந்தன் அருள்பாலித்தான்.
அத்துடன் நல்லூர்க் கந்தனின் இவ் வருட மஹோற்சவத்தின் இறுதி நாளான நாளை தீர்த் தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விண்டோஸ் 7 தரும் புத்தம் புதிய வசதிகள்
விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கணணி வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து தற்போது விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
1. பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கோப்பறைகளை டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் கோப்பறையில் மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும்.
2. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில் எளிதாக அதில் வேலை செய்திட இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்திடவும்.
3. விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம் மிகத் தெளிவான துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக இந்த வசதி மடிக்கணணிகளில் உதவியாய் இருக்கும். டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம் அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம்.
4. டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது கர்சரைக் கொண்டு சென்று இழுத்து விடுவதன் மூலம் இதனை மேற்கொள்ள லாம். முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை இயக்க சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம்.
எடுத்துக்காட்டாக முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும்.
5. டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும்.
6. ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கணணியிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால் பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து தீர்வைத் தெரிந்து கொள்ளலாம்.
விண்டோஸ் 7 தரும் புதிய கூடுதல் வசதிகள் இன்னும் நிறைய உள்ளன. இவற்றைத் தெரிந்து கொள்வதனாலேயே இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது ஈர்க்கப்பட்டு பலர் இதற்கு மாறி வருகின்றனர்.
PSD வகை கோப்புகளை எளிதாக திறப்பதற்கு
அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப்(Adobe Photoshop) ஒரு சிறந்த புகைப்பட மேலாண்மை(Image Editing) மென்பொருளாக இருக்கிறது.
புகைப்படங்களை விரும்பிய வடிவில் மேம்படுத்தவும் மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. பொட்டோ ஸ்டுடியோக்களில் முக்கியமாக இதனையே பயன்படுத்துவார்கள்.
இதில் உருவாக்கப்படும் கோப்புகள் .psd என்ற கோப்பு வகையில் அமைந்திருக்கும். இந்த வகை கோப்புகளை உங்கள் கணணியில் போட்டோஷாப் நிறுவியிருந்தால் மட்டுமே திறக்க முடியும். இது ஒரு கட்டண மென்பொருள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
PSD வகை கோப்புகள் உங்களிடம் பகிரப்படும் போது போட்டோஷாப் இல்லாவிட்டால் என்ன செய்வது? அவசரத்திற்கு அந்த கோப்பைப் பார்க்க வேண்டும். சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். இதற்கு போட்டோஷாப் மென்பொருளை நிறுவாமலே இந்த வகை கோப்புகளைப் பார்க்க சில இலவச மென்பொருள்கள் உதவுகின்றன.
இவைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றைப் பயன்படுத்தும் போது குறைந்த நினைவகமே தேவைப்படும். போட்டோஷாப் பயன்படுத்தும் போது அதற்கு மட்டுமே கணணியின் 50 சதவீத நினைவகம் எடுத்துக் கொள்ளப்படும்.
அதனால் கணணியின் வேகம் குறைந்து காணப்படும். ஆனால் இந்த மென்பொருள்களின் மூலம் போட்டோஷாப் கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் வேகமாக மாற்றங்களைச் செய்யவும் முடியும்.
இந்த மென்பொருள் சிறப்பான முறையில் ஒளிப்படங்களை நிர்வகிக்க உதவுகிறது. போட்டோசாப்பில் செய்யக்கூடிய எல்லாவற்றையும் இதிலும் செய்ய முடியும். பயன்படுத்திப் பார்த்தால் இதன் அருமை உங்களுக்குப் புரியும். உண்மையில் இலவச மென்பொருள்களில் சிறப்பானதாக இருக்கிறது.
இதில் போட்டோஷாப் கோப்புகளைத் திறப்பதற்கு Plugin ஒன்றையும் போட்டுக் கொள்ள வேண்டும். முதலில் கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து Paint.net மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
தரவிறக்க சுட்டி
அடுத்து Photoshop Plugin சேர்க்க கீழே உள்ள சுட்டியில் தரவிறக்கம் செய்யவும்.
http://www.4shared.com/get/R9wH-POu/PhotoShop.html
உங்கள் கணணியில் Paint.net நிறுவப்பட்டுள்ள இடத்திற்குச் செல்லவும்.
C:Program FilesPaint.NETFileTypes
இந்த கோப்பறையில் தரவிறக்கம் செய்த Photoshop.dll கோப்பை பேஸ்ட் செய்யுங்கள். பிறகு போட்டோஷாப் கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் எடிட் செய்யவும் முடியும்.
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011
உன் கண்களாலே செய்த கல்லறை!!
நான் தந்த மலரோ உன் கூந்தலில் இன்னும் வாடவில்லை
நீட்டி நின்ற காதல் மடலோ இன்னும் கசங்கவில்லை,
எழுதித்தந்த கவிதையின் ரசனை இன்னும் குறையவில்லை
நடந்துசென்ற சாலையோரம் நம் பாத தடங்கள் இன்னும் அழியவில்லை,
அதற்குள் சொல்லிப்போனாயடி என்னை மறந்திடுங்கள் என்று
கண்களைக்காட்டி என் இதயத்தை குடைசாயத்து உன் கண்களாலே செய்துவிட்டாயடி எனக்கு ஒரு கல்லறை........
வியாழன், 25 ஆகஸ்ட், 2011
இலங்கையில் அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது! : ஜனாதிபதி
கடந்த 3 தசாப்த காலங்களாக நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான பிரேரணை ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான பிரேரணை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என்றும் நாட்டில் முழுமையாக ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவசரகாலச் சட்டம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முழு காரணமாக இருந்து மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர் அதன்போது, அர்ப்பணிப்பை மேற்கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டம் நீக்க நடவடிக்கை எடுத்தமையானது நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனினும், அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதன் மூலம் மாத்திரம் ஜனநாயகத்தை உறுதி செய்ய முடியாது எனவும், அதற்காக எடுக்க வேண்டிய சட்ட திட்டங்கள் அநேகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம், எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
1971 ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில் பின்னர் 2005ம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
தற்போதைய நிலையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டதனாலும், இலங்கையில் புலியினர் ஒழிக்கப்பட்டு அவர்களின் செயற்பாடுகள் இடம்பெறாததினால் அவசரகால சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றன.
அதுமட்டுமல்லாது மனித உரிமை அமைப்பு மற்றும் சர்வேதச மன்னிப்புச் சபை என்பனவும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.
இவ்வாறு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அவசரகால சட்டத்தை நீக்காதவிடத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு நிபந்தனை விதித்தது.
இதனை இலங்கை அரசு பொருட்படுத்தத்தாதை அடுத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா சபை நிபுணர் குழு அறிக்கையில் கூட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இக்காலகட்டத்தில் இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையென கூறியிருந்தது. பிற்காலத்தில் சனல் 4 ஆவணப்படத்திலும் கூட இலங்கை அவசரகாலச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தன.
கனிணயில் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்துவதற்கு
கனிணியில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்தி நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
கனிணி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான்.
இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். மென்பொருளை இயக்கி நாம் தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியது தான், ஆரம்பத்தில் வேகம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தினால் போதும்.
விசைப்பலகையில் இருக்கும் எல்லாவகையான பொத்தான்களையும் அழுத்தும் வண்ணம் பயிற்சி அமையப் பெற்றிருக்கிறது.
தரவிறக்க http://download.cnet.com/Rapid-Typing-Tutor/3000-2051_4-10666000.htmlடெல்லியில் இன்று அன்னாவை சந்திக்கிறார் நடிகர் விஜய்-உண்ணாவிரதத்தில் பங்கேற்பு
டெல்லி: டெல்லியில் இன்று காலை அன்னா ஹஸாரேவை நடிகர் விஜய் சந்தித்து அவருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கிறார். பின்னர் மாலை வரை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருக்கிறார். சமீபத்தில் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகம் சார்பில் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
வழக்கம் போல சினிமாக்காரர்களின் பாலிட்டிக்ஸ் இதில் குறுக்கிட்டது. நான் வர மாட்டேன், நீ வர மாட்டேன் என்று கூறி பலரும் ஆப்சென்ட் ஆனார்கள். நடிகர்கள் தரப்பில் சூர்யா மட்டுமே ஆஜராகியிருந்தார். இந்த உண்ணாவிரதம் சரியாக திட்டமிடப்படவில்லை, யாரிடமும் ஆலோசனை கேட்கப்படவில்லை, எனவே இதில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் கூறி கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று டெல்லி போய் அங்கு அன்னாவை சந்தித்து ஆதரவு தெரிவிக்கப் போவதாக விஜய் கூறியுள்ளார். மேலும், அங்கேயே இன்று மாலை வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேஸ்புக்கின் புதிய தனியுரிமைக் கட்டுப்பாடுகள் ( privacy controls )!
இன்று உலக அளவில் சமூக வலையமைப்பில் முன்னனியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துருக்கிறது பேஸ்புக். அதிகரித்துவரும் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக் கருதி பல்வேறு தனியுரிமைக் கடுப்பாடுகளை அறிமுகப்படுத்தியும் வருகின்றது.
தற்போது பேஸ்புக்கில் படங்கள், கருத்துக்களை இடுபவர்கள் அதனை யார் யார் பார்க்க வேண்டும் என்று தனியாக செட் செய்யலாம். புவியியல் அமைவிடங்களையும் குறிக்க முடியுமாம். இவை பயன்படுத்த எளிதானது என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் புதிய தனியுரிமைக் கட்டுப்பாடுகள் உடனான பேஸ்புக் தளம் இயங்கத் தொடங்குமாம்.
புதன், 24 ஆகஸ்ட், 2011
புதிய வசதிகளுடன் கூடிய பயர்பொக்ஸ் 6 பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு
அண்மையில் பயர்பொக்ஸ் உலாவியின் 6 வது பதிப்பை வெளியிட்டது மொஸிலா நிறுவனம்.
பயர்பொக்ஸ் 5இல் இருந்த ஆயிரக்கணக்கான குறைகளை சீர் செய்து இப்புதிய பதிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கிறது மொஸிலா நிறுவனம்.
அதிக வேகம், லினக்ஸ் இயங்குதளத்திலும் வேகமாக இயங்குதல் போன்றவை இதன் சிறப்பம்சங்களாகும். மேலும் அண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இயங்கக் கூடிய பதிப்பையும் வெளியிட்டப்பட்டுள்ளது.
http://www.mozilla.com/en-US/mobile/எவ்வாறாயினும் பயர்பொக்ஸ் பதிப்புக்களில் பாரிய மேம்படுத்தல்கள் இல்லாத போதும் ஏனைய உலாவிகளுடன் இருக்கும் போட்டித்தன்மையை தக்க வைப்பதற்காகவே மொஸிலா நிறுவனம் இப்பதிப்புக்களை வேகமாக வெளியிடுவதாக கூறப்படுகிறது.
http://www.mozilla.com/en-US/firefox/features/செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011
அடுத்த ஆண்டு ஐபேட்-3 வெர்ஷன் அறிமுகம்: ஆப்பிள் திட்டம்
உலக அளவில் டேப்லெட் மார்க்கெட்டை கலக்கிக்கொண்டிருக்கும் ஐபேட் டேப்லெட்டின் புதிய மாடலை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தரம் மற்றும் வசதிகளால் வாடிக்கையாளர் கைகளை ஆப்பிள் ஐபேட் கட்டிப்போட்டுள்ளது.
மேலும், சந்தை போட்டி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது புதிய அம்சங்களுடன் ஐபேட் புதிய மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து வருகிறது. இந்த வகையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ஐபேட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமி்ட்டுள்ளது.
புதிய ஐபேட் வடிவமைப்பு பணிகள் முடிந்து சோதனை கட்டத்தில் இருப்பதாக ஆப்பிள் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐபேட்-2 வெர்ஷனிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், 2048*1536 பிக்செல் துல்லியத்துடன் கூடிய 9.7 இஞ்ச் தொடுதிரையுடன் ஐபேட்-3 வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும், 15 லட்சம் ஐபேட்-3 டேப்லெட்டுகளை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களை விரைவில் வழங்குமாறு சப்ளையர்களிட் ஆர்டர் கொடுத்துள்ளது ஆப்பிள். இதனால், அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஆப்பிள் ஐபேட்-3 தனது அழகையும், திறமையையும் வெளியுலகுக்கு காட்டும் என்று மார்க்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மார்க்கெட்டில் புதிய ஆப்பிள் ஐபேட்-3 டேப்லெட் வழக்கம்போல் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கருதப்படுகிறது.
5வது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி
ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.1 ஓவர்களில் 211 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
லசித் மலிங்க 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அஜந்த மெண்டிஸ் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
212 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன 71 ஓட்டங்களையும் சாமர சில்வா 63 ஓட்டங்களையும் பெற்றனர்.
இன்றைய போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஹட்ரிக் சாதனை படைத்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மாலிங்க மூன்றாவது தடவையாக ஹட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட 5 போட்டிகளில் 3:2 என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி தொடரினைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லசித் மலிங்க 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அஜந்த மெண்டிஸ் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
212 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியினர் 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன 71 ஓட்டங்களையும் சாமர சில்வா 63 ஓட்டங்களையும் பெற்றனர்.
இன்றைய போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஹட்ரிக் சாதனை படைத்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மாலிங்க மூன்றாவது தடவையாக ஹட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட 5 போட்டிகளில் 3:2 என்ற அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி தொடரினைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திங்கள், 22 ஆகஸ்ட், 2011
SnowFox YouTube Downloader: வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு
யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பல்வேறு இலவச மென்பொருள்களும், நீட்சிகளும் இணையத்தில் கொட்டிகிடக்கிறன.
இவற்றில் ஒரு சிலவை மட்டுமே சரியானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது SnowFox YouTube Downloader என்னும் மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் அந்த நிறுவனம் அளிக்கிறது.
இந்த மென்பொருளுடைய சந்தை விலை $19 ஆகும். இந்த SnowFox YouTube Downloader மென்பொருளை ஆகஸ்ட் 24வரை மட்டுமே இலவசமாக பெற முடியும்.
இந்த மென்பொருள் விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் ஏழு ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளை இலவசமாக பெற வேண்டுமெனில் உங்களுக்கு முகநூலில்(Facebook) கணக்கு இருக்க வேண்டும்.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூல் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உள்நுழையவும். பின் Like என்னும் சுட்டியை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Submit என்னும் பொத்தானை அழுத்தவும்.
பின் ஒரு மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு லைசன்ஸ் கீ நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை குறித்து வைத்துக்கொள்ளவும். பின் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டு லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும்.
பின் இந்த SnowFox YouTube Downloader அப்ளிகேஷனை ஒப்பன் செய்து, URL யை உள்ளினைக்கவும். பின் வீடியோவானது நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் சேமிக்கப்படும். இதே முறையை பின்பற்றி யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தரவிறக்க http://www.facebook.com/
இவற்றில் ஒரு சிலவை மட்டுமே சரியானதாக இருக்கும். அந்த வகையில் தற்போது SnowFox YouTube Downloader என்னும் மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன் அந்த நிறுவனம் அளிக்கிறது.
இந்த மென்பொருளுடைய சந்தை விலை $19 ஆகும். இந்த SnowFox YouTube Downloader மென்பொருளை ஆகஸ்ட் 24வரை மட்டுமே இலவசமாக பெற முடியும்.
இந்த மென்பொருள் விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் ஏழு ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளை இலவசமாக பெற வேண்டுமெனில் உங்களுக்கு முகநூலில்(Facebook) கணக்கு இருக்க வேண்டும்.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூல் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உள்நுழையவும். பின் Like என்னும் சுட்டியை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Submit என்னும் பொத்தானை அழுத்தவும்.
பின் ஒரு மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு லைசன்ஸ் கீ நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை குறித்து வைத்துக்கொள்ளவும். பின் மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டு லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும்.
பின் இந்த SnowFox YouTube Downloader அப்ளிகேஷனை ஒப்பன் செய்து, URL யை உள்ளினைக்கவும். பின் வீடியோவானது நீங்கள் குறிப்பிட்ட பகுதியில் சேமிக்கப்படும். இதே முறையை பின்பற்றி யூடியூப் தளத்தில் இருக்கும் வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தரவிறக்க http://www.facebook.com/
வரைதல் மூலம் நட்பு வளர்க்க உதவும் இணையம்
வரைதலில் ஆர்வம் இருந்து வரைந்த சித்திரங்களை பகிர்வதிலும் விருப்பம் இருந்தால் டூடுல்.லே இணையதளம் உங்களை நிச்சயம் கவரக்கூடும்.
வரைதலில் எல்லாம் திறமை கிடையாது ஆனால் அழகான சித்திரங்களை பார்த்து ரசிக்க ஆசை என்று நினைத்தாலும் இந்த தளம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த தளத்தை இணைய சித்திர பலகை என்று சொல்லலாம். வரைவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த தளம் பலகையையும் தந்து வரைவதற்கான தூரிகையையும் தருகிறது. வண்ணங்களையும் தான்.
வரையவும் என்னும் பகுதியில் கிளிக் செய்தால் இந்த பலகையும் தூரிகையும் வருகின்றன. அதன் பிறகு விருப்பம் போன்ற சித்திரத்தை வரைய வேண்டியது தான். வரைவது என்றவுடன் ரவிவர்மா போலோ ஹுசேன் போலோ இருக்க வேண்டும் என்றில்லை. உங்கள் மனதில் உள்ள எண்ணத்தை உங்கள் திறமைக்கேற்ப கோட்டோவியம் போல வரையலாம்.
வரைந்து முடித்தவுடன் அதனை சேமித்து ஒரு தலைப்பிட்டு சம்ர்பிக்கலாம். இவ்வாறு சமர்பிக்கப்படும் சித்திரங்கள் முகப்பு பக்கத்தில் இடம்பெறுகின்றன. உங்கள் சித்திரமும் அதில் சேர்க்கப்படும்.
இந்த சித்திரங்களை பார்த்து ரசிப்பதோடு அவை பிடித்திருந்தால் படித்திருக்கிறது என தெரிவிக்கலாம். நண்பர்கள் வட்டத்திலும் இதனை பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்கள் ரசித்த சித்திரங்களையும் பார்த்து ரசிக்கலாம்.
கணணியிலும் இணையத்திலும் வரைவதற்கான வசதி இருக்கிறது என்றாலும் இந்த தளம் எளிதான இணைய சித்திர பலகையை வழங்குகிறது. அதனை பயன்படுத்துவதும் சித்திரத்தை சேமித்து வைப்பதும் எளிதாக உள்ளது. நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி இதனை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது.
இங்கு சமர்பிக்கப்படும் சித்திரங்களை பார்த்து ரசிப்பதும் சுவாரஸ்யமானது. சில கிறுக்கலாக இருந்தாலும் சில எளிமையான ஆனால் அழகான கருத்தை முன்வைக்கின்றன. இணையத்தில் பகிர்தல் சார்ந்த சேவைகள் பிரபலமாக உள்ள சூழலில் வரைதல் மூலம் நட்பு வளர்க்கும் இந்த தளம் சுவாரஸ்யமானது.
ஆனால் பெரிய அளவில் கருத்து பரிமாற்றதில் எல்லாம் ஈடுபட முடியாது. அதே நேரத்தில் விளம்பர நோக்கிலான சித்திரங்களையோ ஆபாச சித்திரங்களையோ சமர்பிக்க கூடாது.
படைப்பு திறன் சார்ந்த சித்திரங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. வரையவும் வழி செய்து அதனை வெளியிடவும் வழி செய்து பகிரவும் வழி செய்யும் இந்த தளம் வரைதலில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு பிடித்தமானதாகவே இருக்கும்.
இணையதள முகவரிதகவல்களை சேமிக்க புதிய சாதனம் கண்டுபிடிப்பு
கோப்புக்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் தொழில்நுட்பம் வளர வளர மாற்றமடைந்து கொண்டு வருகின்றது.
இந்த வரிசையில் கணணி பயனாளர்களுக்கு புத்தம் புதிய சேமிப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கண்ணாடித்தட்டினால் ஆன சிறிய சீ.டி போன்று காணப்படுத் இந்த புதிய சாதனத்தை விரைவில் நீங்களும் பயன்படுத்த முடியும்.
இந்த புதியசாதனம் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றி அவர்கள் கூறியதாவது: இந்த புதிய சேமிப்பு தட்டில் 50 GB வரை தரவுகளை சேமித்துக் கொள்ள முடியும்.
அலுவலகங்களில் பெரிய அளவிலான கோப்புகளை சேமிப்பவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் மற்றும் உறுதியான இந்த கண்ணாடித்தட்டில் தரவுகளை அழித்து சேமித்து வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்கள். இது மிகவும் உறுதியான ஒன்று எனவும் வரைவில் சந்தைக்கு வரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011
சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம்!
சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம் எனும் பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது விஜய் டிவி, நாளை காலை 11 மணிக்கு. இமயமலை மீதான ரஜினியின் காதல் உலகமறிந்தது. இமயமலையையே தனது பூஜயறையாக கருதுபவர் ரஜினி.
எந்திரன் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு தனது நண்பர்களுடன் பாபாஜி குகைக் கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் போய் வந்தார் ரஜினி.
இந்தப் பயணத்தின் வீடியோ வடிவம் விஜய் டிவியில் நாளை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம் என்பதுதான் நிகழ்ச்சியின் தலைப்பு. இமயமலையின் அழகிய இயற்கைக் காட்சிகள், பாபாஜி குகைக் கோயில் அமைந்துள்ள புனிதமான இடம் மற்றும் அந்த சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை இந்த வீடியோவில் காணலாம். இது முழுக்க முழுக்க ரஜினி இடம்பெறும் வீடியோ என்பதுதான் ஸ்பெஷல்.
பாபாஜி குகைக் கோயிலுக்கு சென்று வந்த அனுபவங்களை ரஜினியின் நண்பர்கள் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் இந்த வீடியோவில் காணலாம்.
எந்திரன் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு தனது நண்பர்களுடன் பாபாஜி குகைக் கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் போய் வந்தார் ரஜினி.
இந்தப் பயணத்தின் வீடியோ வடிவம் விஜய் டிவியில் நாளை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம் என்பதுதான் நிகழ்ச்சியின் தலைப்பு. இமயமலையின் அழகிய இயற்கைக் காட்சிகள், பாபாஜி குகைக் கோயில் அமைந்துள்ள புனிதமான இடம் மற்றும் அந்த சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை இந்த வீடியோவில் காணலாம். இது முழுக்க முழுக்க ரஜினி இடம்பெறும் வீடியோ என்பதுதான் ஸ்பெஷல்.
பாபாஜி குகைக் கோயிலுக்கு சென்று வந்த அனுபவங்களை ரஜினியின் நண்பர்கள் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் இந்த வீடியோவில் காணலாம்.
ஒபாமா ஒரு இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால்....( படங்கள் இணைப்பு )
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு...... இந்திய அரசியவாதியாக இருந்திருப்பாரானால் எப்படி காட்சி கொடுத்து இருப்பார் என்பதை காட்டுகின்ற படங்கள் இவை.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

























































