செவ்வாய், 19 மே, 2015

இறைவனை இறைஞ்சி வேண்டுவோம் இன்னுமொரு இழிநிலை வராதிருக்க......

கழிப்பறையில் பிறந்தவர்கள் 
உன்னை கற்பழித்த காடையார்கள்

வெடிகுண்டு மழையில் நனைந்த நீயோ 
கடிநாய்களின் கையில் கைக் குழந்தையானாய்

பள்ளிக்கு சென்ற நீயோ 
படுபாவிகள் கையில் கசங்கிய முல்லையானாய் 

தொல்லை அகன்ற வாழ்வை புதைதைத்தவர்கள் நாம்
வெள்ளைநிற ஆடைஎன்று வேட்டைநாய்களுக்கு விளங்கிடுமா?

பிஞ்சுக் குழைந்தை நீ யென
பஞ்சப்பரதேசிகளுக்கு புரியலையே

தங்கத்தமிழ் குழந்தையே தயங்காது சென்றிடு
எங்கள் குலம் இப்படியே அழிந்திடும் 

மேய்ச்சல் மாடுகளுக்கு இருக்கும் துணிச்சல் 
பாராண்ட தமிழனுக்கு இன்றில்லை

செத்துப்போனது நீதி 
சொத்துள்ளவன் பக்கமே நீதி 

என்ன பாவம் செய்தததைய்யா எங்கள் குலம் 
சோதனைகளோடு வெம்பி வாழ்கின்றோமைய்யா 

பாதுகாப்பை இழந்துவிட்டோம் 
பாவாடைராயர்களுக்கு வேட்டை 
அட்டூழியக்காரானுக்கும் ,அடுத்தவனுக்கும்
இரையாகிப்போகுமா? எம்மினம் 
இதைக்கண்டு இயல்பாக இருக்குமா? எம்மனம் 

இந்த நாசம் பெரும் சேதத்தை தரும் 
உன்னை பலி தீர்த்தவர்கள் விழியின்றிப்போவார்கள்
வாழ வழியின்றி அலைவார்கள் 

அள்ளிநீர் பருக கரமின்றி காமுகன் திரிவான் 
கொள்ளிவைக்க யாருமின்றி
படுக்கையில் மலம் போய்க்கிடப்பான் 

உன் கன்னங்களால் வழிந்த நீருக்கு 
கையாலாகாத நாம்
வஞ்சத்தை வார்த்தையால்
கொட்டிவிடவே முடிந்தது 

இறைவனை இறைஞ்சி வேண்டுவோம் 
இன்னுமொரு இழிநிலை வராதிருக்க......

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

கட்டைக்காட்டு கப்பலேந்தி மாதா




வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கப்பலேந்தி மாதா ஆலய புனரமைப்பு பணிகளை பார்வையிட்டபோது 21/08/2014

புதன், 13 ஆகஸ்ட், 2014

மருதங்கேணியில் குடும்பப்பெண் மீது கடற்படைச் சிப்பாய் பலாத்காரத்துக்கு எதிரான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் - கடற்படைத்தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்

.
 13.08.2014 - புதன்கிழமை

யாழ்.வடமராட்சி மருதங்கேணி விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் நள்ளிரவு மூன்று மணியளவில் குறித்த பகுதி வீடொன்றுக்குள் புகுந்த கடற்படை சிப்பாய் இருபத்து இரண்டு வயதான குடும்பப் பெண் ஒருவரை பலாத்காரம் செய்த போது அந்தப் பெண் கூக்குரல் இட்டதைத் தொடர்ந்து அயல் வீட்டார்கள் ஓடி வந்து சம்மந்தப்பட்ட கடற்படைச் சிப்பாயை பிடித்து தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி இணைப்பாளர் சிறி ரங்கேஸ்வரனுக்கு மருதங்கேணி மக்கள் அறிவித்துள்ளனர். அவ்விடத்துக்கு விஜயம் செய்த ரங்கேஸ்வரன் இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்துக்கு எடுத்துக்கூறியதைத் தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருடன் உடனடியாக தொடர்பு கொண்டு மேற்படிச் சம்பவம் தொடர்பில் உடனடியாகவும், பாரபட்சமற்ற வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்றபோது அது எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதிருப்பதற்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

முன்னர் திருடன் என்று கருதியே பொதுமக்கள் மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். விசாரணைகளின் பின்னரே குறிப்பிட்ட சிப்பாய் கடற்தொழிலாளியின் வீட்டினுள் புகுந்து பெண்ணிடம் முறைகேடாக நடக்க முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாரிடம் கடற்படைச் சிப்பாயை ஒப்படைத்துள்ளனர். பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான சிப்பாயை பளை மருத்துவமனையில் சேர்த்துள்ள பொலிஸார் அவர் மீது மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 12 ஜூன், 2014

சட்டவிரோத கடற்றொழில் முற்றாகத் தடை உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் பணிப்பு



யாழ்.குடாநாட்டில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவோர் தொடர்பில் உரிய சட்டநடவடிக்கை எடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழிலாளர் திணைக்களப் பணிப்பாளருக்கும், கடற்படையினருக்கும் பொலிசாருக்கும் இன்றைய தினம் பணிப்புரை வழங்கியுள்ளார். 

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் இன்றுமாலை பருத்தித்துறை வடக்கு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே அமைச்சர் இப்பணிப்புரையை விடுத்தார்.

சட்டவிரோதமாக கடற்றொழில்களில் ஈடுபடுவோரினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்ட நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதற்கென மூவர் கொண்ட குழுவினை அமைத்துள்ள அமைச்சர் அவர்கள் இக்குழு கடற்படையினர் பொலிசார் மற்றும் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பணித்துள்ளதுடன் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் கடற்றொழிலாளர்களைத் தடுப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளார்.

வான் அகழ்வுப் பணிகள் தொடர்பில் இங்கே விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் தற்போது முனை பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வெளிச்சவீடுகள் புனரமைப்பு தொடர்பில் அவதானஞ் செலுத்தப்பட்டதுடன், காரைநகர், நெடுந்தீவு, யாழ்ப்பாணம், ஆகிய பதிகளில் வெளிச்ச வீடுகளை அமைக்க இனங்காணப்பட்டுள்ளதுடன் வெற்றிலைக் கேணி மற்றும் குடாரிப்பு பகுதிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், தற்போது குருநகர் மற்றும் இன்பசிற்றி ஆகிய பகுதிகளில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் புதிய மீன்பிடித்துறைமுகங்களை அமைப்பது குறித்தும் வரலாற்று ரீதியிலான மீன்பிடித்துறைமுகங்களை மீளப் பெறுவது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

மேலும் சட்டவிரோத கடற்றொழில்களை நிறுத்துவது என்றும் மண்ணெண்ணை மானியத்திற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அமைச்சர் அவர்கள் பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் திணைக்களம் பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கினார்.

கடற்றொழில் திணைக்கள உத்தியோகஸ்தர் பற்றாக்குறை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள், கடற்றொழிலாளர்களுக்கு வங்கிக்கடன் பெற்றுக் கொடுப்பது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், பருத்தித்துறை கிழக்கு பிரதேச செயலர் திருலிங்கநாதன், கரவெட்டி பிரதேச செயலர் சிவசிறி, பொலிஸ், இராணுவ மற்றும் கடற்படை உயரதிகாரிகள், ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன், கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சம்மேளன சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

ஞாயிறு, 18 மே, 2014

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனித நேயத்துடன் முள்ளிவாய்க்கால் இழப்புக்களை நினைவு கூருவோம்

சுமார் மூன்று தசாப்தங்களாக எம் இனத்தை அழித்து வந்த யுத்தத்தை முள்ளி வாய்க்காலுக்குள் முடிவுகண்ட நாளே இந்த மே 18. 

இது எம் இனத்தின் வாழ்வியலிலிருந்து மறைக்கவோ மறுக்கப்படவோ முடியாத ஒரு நாள். நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டு அமைதியாக வாழ்ந்த தமிழ் மக்களது வாழ்வியலை, இலக்கை அடைய முடியாத, வழி தவறிய போராட்டத்தின் மூலம் உறை நிலைக்குக் கொண்டு சென்ற மறக்க முடியாத நாள் இது.

வழிதவறி தடம்புரண்டுபோன எமது போராட்டமானது சொல்லொணா துன்பங்களையும் வாழ்வியலின் இருப்பையும் அடியோடு புதைத்து அதள பாதாளத்துக்;குள் எம்மக்களை தள்ளிவிட்டுள்ளது.  இதற்குள் அகப்பட்டு மடிந்து போன மானிட உயிர்களோ ஏராளம்.

மரணித்த உறவுகள் யாவும் எமது இனத்தின் உறவுகளே. இந்த நினைவுகூரலை வருடந்தோறும் முன்னெடுக்கும்  எம்மவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எந்த விதமான இடையூறுகளும் ஏற்படுத்தாது இந்த நாள்  நினைவு கூறப்படவேண்டும் என்பதே நிலைப்பாடாகும்.

எனவே எமது மக்களின் இருப்பையும் வாழ்வையும் உறுதி செய்யும் வகையில் எம்மக்களின் வாழ்விடச்சூழலில் மனித உரிமைகளை மதிக்கும் நிலமைகள்; ஏற்படுத்தப்பட்டு கடந்த காலத்தின் அவலத்திலிருந்து  எமது மக்கள் மீண்டௌவேண்டும். 

இதற்காக நாம் கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகும். கடந்த காலத்தின் அவலங்களிலிருந்து மீண்டெழவென எம்மக்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் இனி வரும் காலங்களில் எம் இனத்திற்கு நிம்மதியான, அமைதியான வாழ்வை உத்தரவாதம் செய்வதாக அமைய வேண்டும் என்பதே  பெருவிருப்பாகும். 

புதன், 14 மே, 2014

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்புனேரியார் தேவாலயசிரமதான நிகழ்வில் 12/05/2014

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்புனேரியார் தேவாலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிரமதான நிகழ்வில் கலந்து கொண்ட ஈழமக்கள் ஜன நாயகக்கட்சி வடமராட்சி அமைப்பாளர் ரங்கன் மற்றும் வடமராட்சி கரையோர அமைப்பாளர் இரட்ணகுமார் அவர்களோடு பங்கு தந்தையும் விளையாட்டு கழக அங்கத்தவர்களும்



சனி, 10 மே, 2014

குடத்தனை பகுதியில் இருந்து இடம் பெயர்கின்றது மருதங்கேணி பிரதேச செயலக உப பணிமனை

 
8/5/2014 மாலை 6.45 மணியளவில் திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றால் குடத்தனை பகுதியில் அமைந்திருக்கும் மருதங்கேணி பிரதேச செயலக உப பணிமனை சேதமுற்றது.. ஆட்பதிவு பிரிவு பகுதியில் இருந்த கணனிகள் மற்றும் ஆவணங்கள் மழையால் நனைந்தும் சேதமுற்றுள்ளது. எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.ஆட்பதிவு பிரிவு பகுதி கூரைகள் காற்றால் சுமார் 70 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டது. பெரும்பாலான பிரிவுகள் நிரந்தரமாக மருதங்கேணி பகுதியில் அமைந்திருக்கும் தலைமை செயலகத்துக்கு இடம் மாற்றும் செயற்பாடுகள் நடைபெறுவதை நேரடியாக அவதானிக்க கூடியதாகவுள்ளது